ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

படிக்கட்டுகளில் ஒரு பல்கலைக்கழகம்.

 படிக்கட்டுகளில் ஒரு பல்கலைக்கழகம்.

________________________________________________


அந்த கோவில் படிக்கட்டுகளில்

வெளியே வந்து

தெய்வங்கள் 

பேசிக்கொண்டிருப்பது போல் தான்

எனக்குப்படுகிறது.

தெய்வங்கள் கொரானாவைக்கூட‌

"அவதார்"ஆக்கி

மனித உயிர்களை சுண்டலாக 

தின்றுகொண்டிருக்கும்

கால கட்டம் அல்லவா அது.

தெய்வங்களை வெளியே இழுத்துவந்து

உட்கார்த்தி வம்பு பேசினால்

அவைகளுக்கும் புரிந்து போகலாம்.

இந்த பயல்கள் எமப்பயல்கள்.

மனிதனை "ஏ ஐ"ல் பொம்மை செய்து

விளையாடுபவர்கள்.

அப்படித்தான் 

என்றோ எப்படியோ

நம்மைப்படைத்து இந்த 

கோவில் சிறைக்குள் பூட்டி வைத்து

அப்புறம் கொஞ்சம் திறந்து விட்டு

சப்பரம் செய்து 

கொட்டு முழக்கோடு

ஊர்கோலம் செய்து கொள்கிறார்கள்.

அது வெறும் அலங்கோலம்

என்று தெரிந்து கொண்டு தான்

பம்மாத்து செய்கிறார்கள்.

எமப்பயல்கள் இவர்கள்!

_______________________________________________

ருத்ரா

(this is a feedback to fb of sri sekar krishnasamy dt 06.02.2023)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக