"வண்ணக்கிளி சொன்னமொழி என்ன மொழியோ?"
உள்ளத்தின் வண்ணங்களுக்கு
எண்ணங்களே
தூரிகைக்கிண்ணங்கள்.
அழுதாலும்
சிரித்தாலும்
சிலிர்த்தாலும்
நரம்பின் சுண்டுதல்களே
ஆயிரம் நிறங்களின்
ஆச்சரிய வான வில்களை
நிமிண்டிவிடும்.
மூளைக்குள் முகிழ்க்கும்
சில்மிஷங்களே
இந்த மொத்த உலக நாடகம்!
____________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக