தரிசனம்
__________________________________
ஸ்டோரியில்
கவிஞர் விக்ரமாதித்தியனின்
கவிதைகளுக்குள்
புகுந்து கவிதைகளாக
வெளிவந்த என்னையே நான்
தரிசனம் செய்திருப்பதே
என் இந்த கவிதைகள்
____________________________________________
கவிஞர் விக்கிரமாதித்யன் 6
___________________________________
அன்றாடங்களையே
வெறுமையாய்
காய்ச்சிக்குடித்துக்
கொண்டிருக்கும்
இந்த அன்றாடங்களின்
அண்ட சராசரங்களை
தினம் தினம்
உயிர் எழுத்தும்
பெய் எழுத்துமய்
கொப்புளித்துக்
கொண்டிருப்பவனே!
ரேஷன் அட்டைகளில்
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழுக்களும்
புளகாங்கிதம் அடையுமே உன்
புல்லரிப்புச்சொற்கள் கண்டு.
________________________________________21.11.25
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக