வெள்ளி, 21 நவம்பர், 2025

தரிசனம்

 


தரிசனம்

__________________________________


ஸ்டோரியில் 

கவிஞர் விக்ரமாதித்தியனின்

கவிதைகளுக்குள்

புகுந்து கவிதைகளாக 

வெளிவந்த என்னையே நான்

தரிசனம் செய்திருப்பதே 

என் இந்த கவிதைகள்


____________________________________________


கவிஞர் விக்கிரமாதித்யன் 6

___________________________________


அன்றாடங்களையே

வெறுமையாய்

காய்ச்சிக்குடித்துக்

கொண்டிருக்கும்

இந்த அன்றாடங்களின்

அண்ட சராசரங்களை

தினம் தினம்

உயிர் எழுத்தும் 

பெய் எழுத்துமய்

கொப்புளித்துக்

கொண்டிருப்பவனே!

ரேஷன் அட்டைகளில்

ஊர்ந்து கொண்டிருக்கும்

புழுக்களும்

புளகாங்கிதம் அடையுமே உன்

புல்லரிப்புச்சொற்கள் கண்டு.

________________________________________21.11.25

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக