செவ்வாய், 7 மே, 2024

இன்னும் பிறக்கவே இல்லை

 இன்னும் பிறக்கவே இல்லை

_________________________________________

செங்கீரன்.




ஒரு சொல் கேளீர்..

வானம் பிளந்து கக்கியது.

இலக்கணமும் இலக்கியமும் இல்லாமல்

உயிர் மெய்யும் இல்லாமல்

உயிரற்ற உடலுமாய்

கசங்கி கருக்கலைந்து

அல்லது

கருப்பிடித்து

வந்து விழுந்தது.

கேட்காதே.

அதைச் சொல்லாதே.

அதைப்பற்றி மூச்சு கூட விடாதே.

"மறைந்தே"கிடக்கட்டும்.

மறைத்தே வைத்திருக்கவேண்டும்.

நாலு விதமாய் மறைத்து வை.

மீறினால்

தலை சுக்கல் சுக்கலாகி விடும்.

அச்சம்.

தண்டனை.

பாவம்.

புண்ணியம்...

இன்னும்

ஆபாசமாய் குப்பைகள்

குவிந்தன.

கிளறி கிளறி

கடவுள் தேடினான் 

மனிதனை.

மனிதனை அறியும் 

கடவுள் 

இன்னும் பிறக்கவே இல்லை.


____________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக