வெள்ளி, 17 மே, 2024

அகழ்நானூறு‍ 75

 அகழ்நானூறு‍  75

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________

சொற்கீரன்


கல்லூற்று கலித்தநீர் கவிழ்த்த கை

நீடு வாங்கி மருப்பு பொருதிற‌ங்கும்

மல்லல் மழகளிறு பிடி யுண்ண 

நீர் வார்க்கும் கற்சுரம் கனைகுரல்

தழல் சடை வெண்வெயில் ஞாயிற்றின்

நீடூழி முள்ளிய பரந்தலை ஒரு கண்

நிழல் பார்த்து ஏங்கி நடுக்குறும் ஆறும்

அடு கடாம் நீந்தல் யாவும் பொருட்டறன்று.

பொருள்வயின் தேட்டை பொரி பரல் இடற‌

பொலங்கிளர் அவள் முகத்து மைவிழி படுப்ப‌

ஓர்ந்து உய்த்து நீள் அத்தம் அவண் நண்ணி

வேனில் ஓதியும் நிறம் பெயர்த்து வெரீஇ

யாஅம் ஏறியபின் பாண்யாழ் ஆங்கு 

பாலை ப்ண்ணின் பனி இசைபருகிக்

கிடத்தலின் நயமும் நனி கண்டு ஏகும்

தலைவன் ஊரும் பொள்ளா வெள்ளிடை

அவள் செஞ்சீறடி பளிங்கின் தோற்றும்

கல்லென் ஆறும் அவன் களி கூட்டும்.


_________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக