செவ்வாய், 21 மே, 2024

வடிவு

 வடிவு

_____________________________________

கல்லாடன்.



குவாண்டம் தியரியை

புது உருவில் 

வடிவமைக்கப்பொகிறோம் என்று

விஞ்ஞானிகள் 

வரிந்து கட்டுகிறார்கள்.

அப்படித்தான்

கடவுளை வடிவமைப்போம் என்று

இவர்களும் 

பிண்டம் பிடித்தார்கள்.

முதலில் யானை வந்தது.

அப்புறம் குரங்கு வந்தது.

பசுவோ

சாணி போட்டுக்கொண்டே தான்

இருக்கிறது.

இவர்களும் பிண்டம் பிடித்துக்கொண்டே தான்

இருக்கிறார்கள்.

போதும் விடுங்கடா என்னை.

ஏன் 

இப்படி பிச்சு பிசைந்து

பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

கடவுள் முணு முணுக்கிறார்.

இவர்களது சத்தமான இரைச்சலில்

கடவுள் மூழ்கிப்போய்விட்டார்.

_____________________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக