புதன், 1 ஏப்ரல், 2020

அந்த 555. (பிரம்ம சூத்திரம்)

அந்த 555. (பிரம்ம சூத்திரம்)
================================================ருத்ரா

வேதம்
வேதாந்தம்
என்று
கடமுடாக்கள் எல்லாம்
வேண்டாம்.
இதோ
சுருக்கமாய் தருகிறேன்
என்று
வாதராயணர்
555 சூத்திரங்களை எழுதியிருக்கிறார்.
அன்றே
அவர் 555 சிகரெட் பிடித்திருப்பாரோ?
அவர் சொன்ன
புகைவளையங்களைப் பார்த்தால்
நம் தலை சுற்றும்.
ஆனால் அவ்வளவும் ஞானம்
என்கிறார் அவர்.
சாங்கியம்
நியாய வைசேஷிகம்
ஏன்
அவர் சீடர் ஜைமினியின் வாதங்களையும்
கூட‌
அவர் வெளுக்காமல் விட்டதில்லை.
வியாசர் தான் வாதராயணர்
என்றும் சொல்வார்கள்.
விட்டால்
நம் "பழைய பெரியவா" கூட‌
வியாசர் தான் என்பார்கள்.
அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
சனாதனத்தை
நம் மண்டைக்குள் வழுக்கிக்கொண்டு
ஓடுகிறாப்போல‌
எழுதக்கூடிய பேசக்கூடிய‌
பெருந்தகையாளர் தான் அவர்.
அழகிய படத்தோடு
என்னமாய் அது வழுக்கிக்கொண்டு
ஓடுகிறது என்று
நாம் வியப்படைந்தாலும்
அது நல்ல பாம்பு தான்!
சரி
அந்த 555க்கு வருவோம்.

(தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக