திங்கள், 27 ஏப்ரல், 2020

தொலைந்து போகும்வரை


தொலைந்து போகும்வரை
======================================ருத்ரா

கண்ணொடு கண்ணினை நோக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயத்தும் இல.
ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னாலேயே
வள்ளுவர் சொல்லிவிட்டார்.
இந்த முக கவசங்களினூடே
என்னத்தை
சள புள என்று பேசப்போகிறாய்?
கண்களால் 
பார்த்துக்கொண்டே இருப்போம்
இந்த கொரோனாக்கள்
தொலைந்து போகும் வரை!

==============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக