செவ்வாய், 21 ஏப்ரல், 2020

இற்றைத்திங்கள் பிழிஒளிப் பிஞ்சும்....

இற்றைத்திங்கள் நுண்துளிப் பிஞ்சும்....
==========================================ருத்ரா


கொல் களிறும் வெரூஉம் வரிநெடு வேங்கை
இணரிய பூக்களின் சொரிபடு வெதிர்ப்பில்
கொடிய மருப்பொடு அறையும் அறையும்.
வேய்மறை அடர்கான் கண்ணொளி ஒளிக்கும்
எல்லே ஆற்றின் எழில் இலஞ்சி துழாஅய்
மயிரிழை அன்ன நுண்மணல் நூல்பிரி
நுடங்கு நுண்டுளி தூம்புக்கை கொடு
தன் மேல் நீர் இறைத்துக்களிக்கும்.
பொன்னின் வெற்பன் தண்ணிய நாடன்
குறி ஈண்டு தந்து பாணாள் கங்குல்
பிறை வருடி சில்லென புல்லின் சிறுபூ
சிலிர்த்திட என் நெடுவிழி கொய்தான்
இற்றைத்திங்கள் நுண்துளிப்  பிஞ்சும்
என்னொடு உகுக்கும் நோன்மாண் நெஞ்சே!

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக