வெள்ளி, 3 ஏப்ரல், 2020

ஒரு போட்டி

ஒரு போட்டி
=========================================ருத்ரா

தெரியாது தெரியாது
தெரியவே தெரியாது
இந்த
அஞ்ஞானத்தை
யார் விஞ்ஞானம்
என்றார்கள்?
கடவுளைப்படைக்க‌
கடவுளுக்கே
விஞ்ஞானம் தெரியாமல்
மனிதனிடம் வந்து
உன் மூளையைத் தா
என்றான்.
அவனும் உருட்டித் திரட்டி
அன்றே கொடுத்தது தான்
ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
பாவம் ஏமாந்தது அவன் தான்.
ஏ ஐ க்கு
இப்போதுள்ள வெர்ஷன்
அவனுக்குத்தெரியாது.
அரைகுறையாய்
அவன் படைத்தது தான்
இந்த வைரஸ்.
அதை திருத்தும் அறிவும்
மனிதனிடமே உண்டு.
முன்பு இப்படி வந்த
அந்த நோய்களை திருத்தி
வெற்றி கண்டவன் மனிதன்.
மரணத்தைக்கண்டு
மனிதன் பயப்படவில்லை.
நம்மை அறிந்து
பயம் அற்றவர்களாய் இவர்கள் 
ஆகி விட்டால்...?
என்று
கடவுள் தான்
முள்ளு முள்ளாய்
இந்த முகமூடியில்
ஒளிந்து வந்து
கோமாளித்தனம்
செய்து கொண்டிருக்கிறான்.

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக