வெள்ளி, 3 ஏப்ரல், 2020

முள் இல்லாத ரோஜா



முள் இல்லாத ரோஜா
======================================ருத்ரா

கவலைப்படாதே
உன் இதயம் 
உன் இதயத்துக்குள்ளேயே
ஊரடங்கு செய்து
துடித்துக்கொண்டிருந்தாலும்
என் இதயத்தை 
உன் இதயம் தேடித்தான்
தெருவில் அலையவிட்டிருக்கிறேன்.
அதனால் 
அதைக் கைது செய்தவர்கள்
ஒரு நூதன தண்டனை கொடுத்தார்கள்.
அந்த முள்ளுவைரஸ் மாடல்
தலைக்கவசத்தை அதன் மீது
கவிழ்த்தார்கள்.
காதலை மட்டும் துடித்துக்கொண்டிருந்த‌
அந்த இதயம் மீது பட்ட‌
அந்த முள்ளுகிரீடம் காணாமல் போய்விட்டது.
ஆனால் அங்கே 
எப்படி ஒரு ரோஜா வந்தது?
வியப்பில் வாயடைத்துப்போனார்கள்.
அன்பே.
நம் காதல்
முள் இல்லாத ரோஜா மட்டும் அல்ல‌
முள்ளையும் ரோஜா ஆக்கிவிடும்
அபூர்வமான தொரு 
பூ அல்லவா?

================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக