சனி, 4 ஏப்ரல், 2020

பெரிது பெரிது மானிடம் பெரிது.

பெரிது பெரிது  மானிடம் பெரிது.
==========================================ருத்ரா

பெரியார் என்றொரு
பெருந்தகையாளன்
மனிதனின் அடிவானம் 
சென்று
அறிவுச்சூரியனாய் 
விழித்து வந்தான்.
கையில் விடியல் ஏந்திக்கொண்டு
நம் இருட்டிற்குள்
உலா வரத் தொடங்கினான்.
அவன் 
வகுப்பு வாரியம்
பேசவில்லை என்றால்
கருப்புத்தமிழன்
காணாமல் போயிருப்பான்.
பெரிது பெரிது
மானிடம் பெரிது.
மனித நியாயத்தின் சரித்திரம்
மண்ணுக்குள் போய்விடாமல்
இருக்க‌
மண் வெட்டி தந்தவர் பெரியார்.
வெள்ளைக்காரன்
இன்னொரு வெள்ளைக்காரனுக்குத்தான்
சுதந்திரத்தைக்கொடுப்பான்
என்று
சுதந்திரத்துக்கு போராடவில்லை
பெரியார்.
கருத்து சுதந்திரம் இல்லாமல்
கடவுள் என்னும் கல்லைக்கட்டி
தமிழனை
அறியாமைக் கடலுக்குள் எறிந்துவிடும்
அபாயத்தை தடுத்த‌
சமுதாய அறப்போரட்டத்தின்
தந்தை பெரியார்.
அவரைக்
கொச்சைப்படுத்தி
மகிழ்ந்து பார்க்கும் அறிவுஜீவிகளுக்கு
அறிவும் இல்லை
ஜீவனும் இல்லை.

=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக