வியாழன், 30 ஏப்ரல், 2020

ருத்ராவின் குறுநானூறு (முதலாம் பத்து)

ருத்ராவின் குறுநானூறு (முதலாம் பத்து)
===========================================

குறு நானூறு (1)
===============================ருத்ரா

பனை படு கிழங்கு உரி பிளந்தன்ன‌

கனை கொடு வெய்நோய்

கலிங்கம் எரிக்கும். கழை அடுக்கத்து

மழை உரி உடுத்த மணி அறை வெற்ப!

மஞ்சு துகில் போலும் தழீஇயத் தருதி.

என் ஆவி ஓம்ப விரைதி மன்னே.



=====================================


குறுநானூறு (2)

==================================ருத்ரா


தன் பார்ப்பு தின்னும்

கொடுமுதலை வாய்ப்பட்டன்ன‌

நெடுநாடன் வாய்ச்சொல்

யானே பட்டழிந்தேன்

ஞாழல கரைய அலைகூர

அலையிடை காண் அளியனோ.

____________________________________


குறுநானூறு (3)

=====================================ருத்ரா


கயம் துகள் மூசும் அலர் பெய்

பேழ்வாய்க் கடுவளி சுரம் நுழைபடுத்து

குச்சிக்கை நீட்டி அஞ்சிறு பைம்புள்

அணைக்கத் தாவும் காட்சிகள் மலிய‌

தமியனாய் எல்வளை நோக்கி

வறள் பேயாறு வருந்தி மிசை கடவும்.


==========================================


குறுநானூறு (4)

=====================================ருத்ரா


யாஅ  மரத்தன்ன இலைதொறும்

கதிரொளி பூசி மின்னிய வானம்

மருட்கும் நின் அம்பசலை கண்டுழி

தாய் உள் உள் வெட்கும் குறுகும்.

குடுமி மலையன் செவி போழ்ந்திடு

காலம் காட்டும் முன் விரைந்து.


========================================
குறுநானூறு (5)

=======================================ருத்ரா

தன் கூரலகு உடையுபு வெரூஉம் குருகின்

வாய்ப்படு அயிரை துடி கண்டக்கால்.

அஃதே நீயும் நுண்பறை முரல் போலும்

அவனை உள்ளித் துடித்தாய் என்னே.

அலர் படுமுன் ஆற்றிக்கொள் அணியிழாய்.

===========================================

குறுநானூறு (6)

======================================ருத்ரா


விழி நோக்கி விழி அகலுங்கால்

அவள் மான் விழி மைவான் பரவி

வயின் வயின் இமைப்ப ஆறு இடறி

அவல் படுத்து எழுந்து அவன்

மாணடி சிலைக்கும் வாணுதல் குறிக்கும்.



===========================================


குறுநானூறு (7)

==================================ருத்ரா


சேம்பு இலை சுளகாய் அவள் கைஎறி

பூங்கரும்பு உலக்கை விசும்புடன் மூட்டி

இடை இடை இடை இல மாயம் செய்து

இடித்து உவக்கும் இன்பம் கண்டான்

மன்று மறந்தான்.மணி முடி மறந்தான்

அவள் அசைதரு நீழல் நீடு இனிதிருந்தான்.


=================================

குறுநானூறு (8)

==================================ருத்ரா


மீன்சினை அன்ன வெண்மணல் குவைய‌

ஞாழல் உறங்கும் தண்துறை நாடன்

வரும் நிமித்தம் வழி வழி நோக்கி

கழங்கு அடுக்கி கண் ஓர்க்கும்மே

மென்மயிர் சிலிர்க்க இறை வளை திருத்தி.


================================

குறுநானூறு (9)

=======================================ருத்ரா

வள் உயிர் வணர் மருப்பு

வயங்கொலிப் பாலை பண்ணிய

தீங்குரல் என்னுள் இன் தீ பூப்ப

அவன் குரல் ஆங்கு ஆவி இழைப்ப

வெள்ளி கிழித்து நெடுவான் கீறும்.

===========================================

குறுநானூறு (10)

=======================================ருத்ரா.



ஒள்ளிய குடுமி வண்ணம் அசைப்ப‌

வெள்ளிய மின்னல் இடி உண் மஞ்ஞை

கலவம் பரப்பி  க‌ளித்தது போன்ம்

கதுப்பு அலையெறி விசும்பும் களிகூர்

உள்ளத்தன்னாள் உள்ளிய வெற்பன்

கறங்கு பறையும் ஒளித்தே ஒலிக்கும்.



============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக