புதன், 22 ஏப்ரல், 2020

கொரோனாவின் கவிதை.

கொரோனாவின் கவிதை.
‍‍‍‍‍________________________________ருத்ரா.

‍‍‍
மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்.
..................
இந்த மனிதன் வாழுமிடத்தில்
பறவைகள் ஏது?
மான்கள் ஏது?
அவை எல்லாம்
சிறைக்கூண்டுகளில்.
அவனே
"மாத்தி யோசி" என்றானே
என்று
நானும் மாத்தி யோசித்தேன்.
ஆர் என் ஏ "டெக்ஸ்ட் புத்தகங்களிலிருந்து"
நானும்
வெளியே வந்து விட்டேன்.
அவர்கள் இப்போது
கூண்டுகளில்.


‍‍‍_______________________________________________

‍‍‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக