திங்கள், 1 ஜூலை, 2019

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
==============================================ருத்ரா

தமிழ் என்றால் தமிழுக்குள்ளும்
ஆயிரம் மொழிகளின் விதை இருக்கும்.
உலகம் இமை விரித்திட‌
சிந்தனைக்கதிர்கள் தந்தது தமிழ்.
ஞா என ஒலிக்கும்போது
நாவின் ஊஞ்சல் ஓசை கேட்கும்.
ஞாலுதல் என்பது தொங்குதல் குறிக்கும்.
நாண்டுகிட்டு இறந்தான் என்பது
ஞான்று கொண்டு இறந்தான் என்பதே ஆகும்.
ஊஞ்சல் எனும் ஊசல் தான்
இந்த ஞாலம் எனும் உலகம்.
விண்வெளியில் ஈர்ப்புக்கயிற்றில்
தொங்குவதே நம் ஞாலம் என்னும்
உலகம் ஆகும்.
ஞான் என்றும் நான் என்றும்
உட்கிடக்கை அறிவதே ஞானம் ஆகும்.
தமிழ் எனும் சொல்லுக்கும்
ஒரு வேர் உண்டு.உயிர் உண்டு.
ஒலித்தல் இமிழ் ஆகும்.
தம் ஒலி எனும் நம் மொழி அல்லது பேச்சு
இங்கு தமிழ் ஆனது.
தமிழ் எனும் மொழி
இனிய தண்ணிய அருவி போல்
ஒலிக்கும்.
தனிமையில் இருக்கும் போதும்
தமிழ் பற்றி நினையுங்கள்.
தமிழ் தனில் நனையுங்கள்.
சிந்தனை விரியும்.கற்பனை பெருகும்.
அதுவே அறிவின் ஒளி.

===========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக