வெள்ளி, 19 ஜூலை, 2019

கடவுள் விஞ்ஞானம்

கடவுள் விஞ்ஞானம்
================================================ருத்ரா

இது என்ன
ஒரு முட்டாள்தனமான தலைப்பு?
ஆத்திகர்களுக்கும்
நாத்திகர்களுக்கும்
கோபம் கொப்பளிக்கிறது.
கோபம் வேண்டாம்.
கடவுள் = கடவுள் உண்டு.
விஞ்ஞானம் =கடவுள் இல்லை.
இப்போது
இரண்டையும் பொருத்திய
சமன்பாட்டைப்பாருங்கள்.
கடவுள் உண்டு = கடவுள் இல்லை.
ஆத்திகர் =நாத்திகர்.
காஞ்சிப்பெரியவா = ஈ.வே.ரா
அதெல்லாம் எதற்கு
ராஜாஜி = ஈ.வே.ரா
என்று
ஒரு நட்பின் இலக்கணம்
சொல்கிறது.
அதனால் தான் இப்படியும்
ஒரு குட்டிக்கதை சொல்லலாம்.
கடவுளும் சைத்தானும்
ஒரு நாள் ஒரு வட்டமேஜையில்
சந்தித்துக்கொண்டார்களாம்.
அப்போது
தங்கள் தங்கள் முகமூடிகளைக் கழற்றிக்
கையில் வைத்துக்கொண்டார்களாம்.
ஆனால் அந்த வட்டமேஜையில்
ஒரு திடுக்கிடும் அதிர்சசி
உட்கார்ந்து கொண்டிருந்தது.
கடவுள் முகமூடி சைத்தான் கையிலும்
சைத்தான் முகமூடி கடவுள் கையிலும்
இருந்ததே
அந்த அதிர்ச்சி.
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
"என்ன இந்தப்பயல்கள்
நம்மைக் கண்டுபிடித்தார்களா இல்லையா?"
ஊஹும்......
கண்டுபிடித்திருந்தால்
இப்படி மூடத்தனமாக
"அத்திவரதரை" பார்க்கப்போகிறேன்
என்று
அந்த நாலு பேர்கள் இறந்திருப்பார்களா?

கடவுளும் சைத்தானும்
நமுட்டுத்தனமாய் சிரித்துவிட்டு
கிளம்பிசென்றார்கள்.

==========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக