வியாழன், 25 ஜூலை, 2019

கடவுளற்ற கடவுள்

கடவுளற்ற கடவுள்
===================================ருத்ரா

கடவுள் என்று
நினைத்தது
மனிதன் தானே.
அப்படியென்றால்
கடவுளைப்படைத்தது
மனிதன் தானே.
மிருகங்கள் அப்படி
எதையும் படைக்கவில்லை.
கடவுளும் அப்படி
எதையும் படைக்கவில்லை.
மனிதனின் மூளையே
எல்லாம் படைத்தது.
மனிதனின் மூளையை
படைத்தது எது?
நிச்சயம் அது கடவுள் இல்லை.
அது எது என்று
அறிவது இயற்கையின் உந்துதல்.
ஆனால்
இங்கே இயற்கை என்பது
கடவுள் இல்லை.
இயற்கையாகவே
ஒரு உந்துதல் எனும்
இயற்கையாலே எல்லாம் வந்தது.
அந்த
உந்துதல் இன்றி
மனிதனே இல்லை.
மனிதன் இல்லையெனில்
கடவுளே இல்லை.
முதல் முதல் சிந்தித்தவனே
கடவுளை
இங்கு ஈன்றெடுத்தான்.
மீண்டும் ம் சிந்தித்தவனே
படைக்கப்பட்டது
கடவுள் இல்லை என்றான்.
சிந்தனையே
இங்கு எல்லாம் ஆனது.
கடவுளின் கருவறையும்
கடவுளின் கல்லறையும்
இங்கு
சிந்தனையே.
அறிவு தோன்றும் போது
அறிவின்மை தொலைகிறது.
மனிதன் அறியும் போது
கடவுள் தொலைந்து போகிறான்.
மனிதனே
மறுபடியும் நீ
சிந்தனை செய்
கடவுள‌ற்ற கடவுளை!

===========================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக