திங்கள், 22 ஜூலை, 2019

சந்திராயன் 2

சந்திராயன் 2
===================================ருத்ரா

 நம் விஞ்ஞானிகளுக்கு
பொன்னாடைகள் போர்த்துவோம்.
ரோஜாக்களின் மழை பொழிவோம்.
உடனேயே சரி செய்து
விண்ணில் ஏவி விட்டது கண்டு
உலகமே பாராட்டுகின்றது.
நம் உளங்கனிந்த பாராட்டுக்கள்
கோடி கோடி கோடி என்று சொல்லுவோம்.
எதற்கெடுத்தாலும்
நாசாவைக் கண்டு
மூக்கில் விரல் வைக்கவேண்டியதில்லை.
யாரும் தொடாத நிலவின் அந்த
அமுத கன்னத்தை
நாம் வருடப்போகிறோமே.
அமுதைப்பொழியும் அந்த நிலவில்
எங்களுக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.
"தமிழுக்கும் அமுதென்று பேர்"
என்று பாடினானே எங்கள் கவிஞன் .
"நிலவுக்கும் தமிழ் என்று
பேர் சூட்டினால் என்ன? "
இஸ்ரோ என்றாலே
"இந்தி சிலேட்டு தானா?"
சந்திராயன்
பிராக்யான்
விக்ரமன்
அப்புறம்
ஹனுமான்
சுக்ரீவன் என்று
நாம் "பச்சோம் கி கிதாப்"தான்
படித்துக்கொண்டிருக்கவேண்டுமா?
திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் தான்
இந்தியத்துவத்தின் முதல் இருப்பிடம்.
வலிய இந்தியை திணிப்பதற்கு மட்டும்
அறிவியலை பயன்படுத்தும்
அறிவின்மை
நம் பாரதப்பேரொளியிலிருந்து
நீக்கப்பட வேண்டும்.

======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக