செவ்வாய், 2 ஜூலை, 2019

யோகிபாபுவின் தர்மப்பிரபு

யோகிபாபுவின் தர்மப்பிரபு
==========================================ருத்ரா

புராணங்களில்
எமதர்மன் என்பவன்
எருமைமாடும் பாசக்கயிறுமாய்த்தான்
அலைவான்.
இறப்புக்கடவுள்
இங்கே எப்படி
யோகிபாபுவிடம்
சிரிப்புக்கடவுள் ஆனார்?
இன்று நேற்று அல்ல‌
சினிமா நடிகர்களின்
சிரிப்பு வசனங்கள்
எப்போதுமே இந்த
எம தர்ம ராஜாவை
சின்னா பின்னப்படுத்தி
சும்மா ஆயிரம் வாலாக்களை
தெறிக்கவிட்டு
சிரிப்பினால்
சிலுப்பவைத்துக்கொண்டிருக்கின்றன.
ஐந்து ஆண்டுகளாய் நடத்திய‌
தமாஷ்
போதாதென்று
இன்னொமொரு ஐந்தாண்டு
தமாஷ்க்கு
குத்தகை எடுத்த காவிக்காரர்கள்
பற்றி வயிறு குலுங்க
சிரிக்கவைக்கும் பாணியை
யோகிபாபு கையில் எடுத்திருப்பதே
வசூல் குவியக்காரணம்.
முக நூல் வழியாகவும்
யோகி பாபுவுக்கு
ஒரு செவண்டி எம் எம் திரை
சிரிக்க சிரிக்க
விரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய
நிகழ்வு தான்!
அந்தக்காலத்தில்
திராவிட ஆட்சியை கிண்டல்
பண்ணிய "துக்ளக் சோ"வுக்கு
ஒரு படை திரண்டது போல்
இப்போதும் இளைஞர் படை
திரள்கிறது.
"ஆரியக்கூத்தாடினாலும்
காரியத்தில் கண் வைத்திருப்பவர்கள்
அல்லவா வடக்கத்தியர்கள்.
பாருங்கள்
புதுச்சேரி வழியாகவும்
ஒரு பொம்மைத்துப்பாக்கியை
நீட்டுகிறார்கள்.
தமிழர்களே!
துப்பாக்கி வேண்டுமானால்
பொம்மையாக இருக்கலாம்
ஆனால் குறி வைப்பது
உண்மை தான்.
சிம்பு தேவர்களே
இந்த யோகி பாபுவை வைத்து
அந்த பொம்மை ராஜ்யத்தையும்
கொஞ்சம்
தோலுரித்துக்காட்டுங்களேன்.
நாங்கள் முன்னூறுக்கும் மேல்
ஜெயித்த பெரிய ஜனநாயகம் என்பார்கள்.
அன்று அந்த "துக்ளக்கும்"
இந்த பெரிய ஜனநாயகத்தை
சட்டை செய்யவில்லையே.
மதம் சுரண்டலுக்கு துணைபோயிருக்கலாம்.
மதமே சுரண்டல் ஆனது தான்
இன்றைய வேதனையான வரலாறு.
வேதனைகளையும் நகைச்சுவையாக்கி
நம் சிந்தையில் கூர் தீட்ட வேண்டிய‌
கால கட்டம் இது.
இட்லரின் நறுக்கு மீசையை
ஒட்டி வைத்துக்கொண்டு
அன்று
சார்லி சாப்ளின் அடிக்காத லூட்டியா?
யோகிபாபுகள்
நம் விடியலுக்கு வழிகாட்டட்டும்.

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக