ஞாயிறு, 28 ஜூலை, 2019

சீற்றத்தின் ஒரு ஆற்றுப்படை.

சீற்றத்தின் ஒரு ஆற்றுப்படை.
==========================================================ருத்ரா

இளைஞனே
ஒரு சொல் கேளாய்!
கோடி கோடி இளைஞர்கள் வெள்ளத்தில்
அந்த அலைக்கூட்டத்தில்
நீயும் ஒரு அலை.
நீ எழுதப்போகும் சரித்திரம்
இந்த அலைகளில்
எழுகின்றது.
படர்கின்றது.
இந்த தேசம் உன்னை நம்பிக்கிடக்கிறது.
இது வரை மூவர்ணக்கொடியை
ஏற்றி
இறக்கி
இவர்கள் என்னத்தைக்கண்டார்கள்?
இதில் இப்போது
நான்குவர்ணம் காட்டுகிறார்கள்.
நான்கு வேதம் சொல்கிறார்கள்.
பிறப்பால் பேதம் வளர்த்து
ஆட்சி பீடம் கட்டுகிறார்கள்
முன்று சதவீதம்
மற்ற தொண்ணூற்றேழு சதவீதத்தின்
முதுகில் ஏறி சவாரி செய்யவே
சாதி மத வெறியின் வேலிகளை
வலிமைப்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சிகள்
நெல்லிக்காய் மூட்டையாய்
சிதறிக்கிடப்பதே
இவர்கள் சதியாலும் சாணக்கியத்தாலுமே.தான்..
அன்பார்ந்த இளைஞர்களே
கம்பியூட்டரின் புயல்கள் நீங்கள்.
உங்கள் அல்காரிதங்களையே
அவர்கள் பஞ்சாங்கம் ஆக்கிக்கொண்டார்கள்.
கோடி கோடி ரூபாய்களை
தீவனமாக்கி
இவர்கள் வளர்த்த‌
பகாசுர கார்ப்பரேட்டுகளே
பத்தாம்பசலிக்கோட்பாடுகளையும்
சூடாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது..
"இந்து ராஷ்ட்ரா"வே
இந்தியாவை விழுங்கக்காத்திருக்கிறது.
ஓ!இளைஞர்களின் புயற்படையே!
"எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல்
இவிஎம் களில் மோசடிக்கு வழியே இல்லை
என்று
பரப்பல் யாகம் மும்முரமாய் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நெருப்பில்லாமல் புகையில்லை.
இ வி எம்கள் வாந்தியெடுக்கும் முன்
அந்த ஓங்கரிப்பின் குரலில்
கருத்துக்கணிப்பு
எப்படி துல்லியமானதாக இருந்தது?
ராணுவத்தில் நடத்தும் துல்லியத்தாக்குதலை
மக்களின் ஜனநாயக‌த்தின் மீதே
ஆபரேஷன் தாமரை ஆக்கிவிட்டார்களா?
மக்களாட்சியும் சிதைந்து போனதோ?
இளைஞர்களின்
சீற்றப்படையே
இனி நீங்கள் எழுதுங்கள் ஒரு ஆற்றுப்படை.
இந்த போலி ஜனநாயகவாதிகள்
புறமுதுகிட்டு ஓடட்டும்.
மின்னல் விழுதுகாளாய் தொங்குகின்ற‌
உங்கள் கேள்விகளே போதும்
அதில் வானமே தீப்பற்றி எரியும்!
அந்த வேள்வியில்
 அவர்கள் மந்திரவேதமும் தந்திரவாதமும்
தறிகெட்டு ஓட்டட்டும்.
கும்பமேளாக்களின் மாய்மாலங்கள்
குலைந்து சிதறட்டும்.
வருகின்ற ஆகஸ்டு பதினைந்து
நமது புதிய சுதந்திரம்..
ஏற்றுவீர் ஏற்றுவீர் மூவர்ணக்கொடியை!
தூற்றுவீர் தூற்றுவீர்
அந்த நான்கு வர்ணச்சுரண்டல் கொடியை!

=====================================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக