சனி, 20 ஜூலை, 2019

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி
======================================================ருத்ரா

நான் நீள நீளமாய்
வாக்கியங்கள் எழுதிக்கொண்டே போகிறேன்.
எங்கே முற்றுப்புள்ளியிட..?
எனக்குத்தெரியவில்லை.
அந்த நாற்றம்பிடித்த
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆன
எலும்புக்கூட்டிலிருந்து
துணிச்சுருளை நீக்கிப்பார்க்கிறேன்.
பிரமிடு எனும் பிரம்மாண்ட கட்டிடத்தின்
அடிவயிற்றில் இருக்கிறது அது.
அந்த தொடையெலும்பில்
ஏதோ எழுத்தை தீயால் சுட்ட
தடம் தெரிகிறது.
அது என்ன எழுத்து ?
.....
........
போதும் போதும்
ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு
மேலே வருகிறேன்.
இப்போது எல்லாம் புரிகிறது.
மனிதனுக்கு மனிதன் அடிமை
என்று
சூடு போட்ட தழும்பு அது.
இன்று
சூடும் தழும்பும் வேறு வேறு.
ஆம்
கடவுள் என்று
அந்த அறியாமை
மனிதனை விரட்டி விரட்டி
வர்ணம் தீட்டி வைத்திருக்கிறது.
அந்த அறியாமையே
அறிவின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

பாருங்கள்
இன்றும்
எறும்புகளாய்
அத்தி வரதர் அடியில்
நசுங்கி உயிர் தொலைக்கிறார்கள்.
மனிதனே
இன்றாவது ஒன்றைத்தெரிந்து கொள்.

லட்சம் அல்ல.
பல பில்லியன்கள் ஆண்டுகளாய்
அந்த வானம்
உன் சிலேட்டு தான்.
நீ தான் அதில் அகர முதல எழுதவேண்டும்.
அதை எப்போது எழுதப்போகிறாய்.
தினம் தினம்
ஈசல்களாய் நீ
உதிர்ந்தது போதும்.

===============================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக