வெள்ளி, 19 ஜூலை, 2019

கயிற்றரவு.


கயிற்றரவு.
===================================================ருத்ரா

இந்த நள்ளிரவு
ஒரு கோப்பை போல்
மேஜையில்
ஆறாத காபியாக
ஆவியை விட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆவிக்கும் நிழல் உண்டு
எங்கோ பிரேசில் காட்டில்
காப்பிக்கொட்டைகள்
நசுக்கப்பட்டு இங்கு வந்து கூட
அவை உயிரை விடலாம்.
நடு நிசியில்
அந்த நைந்த விளக்கின் ஒளியிலும்
காபியின் ஆவிச் சுருள்
நெளிந்து நெளிந்து நிழல் காட்டுகிறது.
என்ன ஆயிற்று ?
என் விலா எலும்புகள்
நொறுக்கப்படுகின்றன.
அரை குறையாய்
காகிதத்தில் கிறுக்குகிறேன்.
என்னை அனக்கோண்டா விழுங்கி விட்டது.
என்னைக்காப்பாற்றுங்கள்...
....
.....
மறுநாள் வெகுநேரம் வரை
கதவு திறக்கப்படாத வீட்டிலிருந்து
அழிந்து போயிருந்த கிறுக்கலுடன்
இருந்த காகிதக்கசக்கலையும்
ஒரு பிணத்தையும் மீட்டார்கள்.
அனக்கோண்டா என்ற அந்த
கிராஃ பிக்ஸ் பாம்பு அங்கு இல்லவே இல்லை.
அதன் சுவடுகளும் இல்லை.

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக