புதன், 17 ஜூலை, 2019

ஆனந்தவிகடனா? அழுகை விகடனா?

ஆனந்தவிகடனா? அழுகை விகடனா?
===================================================ருத்ரா

உதயநிதி
திமுகவின் இளைஞரணி தலைவர்
ஆனதற்கு
விகடன் பக்கங்களில்
ஏன் இத்தனை ஒப்பாரியும்
அழுகையும்?
அந்த உட்கட்சி விவகாரத்தில்
ஜனநாயகம் கொஞ்சம் சறுக்கியிருக்கலாம்.
ஆனால்
மத்தியில்
நாடே ஜனநாயகத்தை தொலைத்தது போல்
விக்கித்துப்போய் நிற்கிறது
அதைப்பற்றியெல்லாம்
பத்தி பத்தியாய் பற்றி எரியும்
என்று பார்த்தால்
ஒன்றையும் காணோம்.
ஆனால் உதயநிதி விவகாரத்தை
பூதமாய் காட்டி
தங்கள் தார்மீகக்கடமையை
புஸ்வாணம் ஆக்கிக்கொண்டிருக்கிறது விகடன்.
உதயநிதியை
அவசரம் அவசரமாக
நாற்காலியில் உட்கார்த்த வேண்டிய‌
அவசியம் இல்லை தான்.
ஆனால்
கோவாவில் மீண்டும் அதே வியாபாரம்
சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது.
கர்நாடகாவிலும் ஆள் பிடிப்பு அரசியல்
அமோகமாய் நடக்கிறது.
மத்தியில் இருந்து
சூத்திரக்கயிறு அசைக்கப்படுவதால்
சூத்திரர்களின் ஆட்சியை பிடுங்கிவிடும்
ஆரியக்கூத்து அம்பலம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இதற்கு சிறப்பு இதழே போடலாமே.
ஆனால்
ஆனந்தவிகடன் சிறப்பு எழுத்தாளர்கள்
திமுகவின் ஜனநாயகத்துக்குள் போய்
மீன் பிடிக்கக்கிளம்பியிருக்கிறார்கள்.
நடுநிலையாக பேனாவை தூக்கி நிறுத்துபவர்கள்
திமுகவை மட்டும் குறி வைப்பதேன்?
எதிர்க்கட்சி வரிசையை கலையச்செய்ய‌
ஏதாவது வியூகம் கிடைக்குமா என்று
எதேதோ எழுதிக்கொண்டிருந்தார்கள்.
அதன் தொடர்ச்சி தான்
ஏதோ கனிமொழி அவர்களுக்காக‌
கண்ணீர் வடிப்பது போல இந்த நாடகம்.
அப்படியே கனிமொழிக்கு
ஒரு பொறுப்பு கொடுத்தாலும்
குடும்ப கார்ப்பரேட் என்ற முத்திரையை
குத்த தயாராய் தான் இருக்கிறார்கள்.
திமுக மீது சேற்றை வாரியிறைத்தால்
இடைத்தேர்தலில் கொஞ்சம் இடைஞ்சல்
செய்து பார்க்கலாம் என்று தான்
இந்த கட்டுரை.
நரித்தனம் செய்துகொண்டே
பத்திரிகை நாட்டாண்மை செய்யும்
விகடனுக்கு இது அழகல்ல.
==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக