செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

காதல் தினக்கவிதை (2)





காதல் தினக்கவிதை (2)

நிலா நிலா ஓடிவா
=========================================ருத்ரா

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
இல்லாவிட்டால்
உன்னையே
இவர்கள்
நறுக்கி நறுக்கி நறுக்கியே
உப்புக்கண்டம் போட்டு
கவிதை தொகுதி போடுவார்.

மயில் பீலிகளிலும்
தடவி தடவி
ரத்தம் கசிய வைப்பதில்
எழுத்துக்களும்
எலும்பு துருத்திக்கொண்டிருக்கும்.

பாலவன மணல்துளிக்குள்
படுத்துக்கிடந்து எழுதுவார்.
ஒட்டகங்கள்
ஓய்ந்து நின்று
அங்கு வந்து "நயாகரா" பெய்து
நட்டமாக நின்றதென்று
நடுகல் வைத்து எழுதுவார்.

பேனாவுக்குள் புகுந்து கொண்டு
நிலவுச்சதையை உருக்கியே
காகிதமெல்லாம்
வட்டம் வட்டம் வட்டமாய்
வடாங்களும் பிழிந்து தள்ளுவார்.

போய்க்கொண்டே இருக்கும் கடையாணி சக்கரத்தின்
நாக்கை நக்கிப்பார்க்க துடித்தது.
சக்கரப்பட்டையில் சக்கரவாகங்கள் நசுங்கிக்கிடந்தன.
சிறகுகளில் எல்லாம்
நட்சத்த்திரப்பொடிகள் பார்பர்ஷாப் குப்பையாய்...
பிரமிடுகள் பிடரிமுளைத்து
கோரைப்பற்கள் காட்டி வாய் பிளந்தன.
மெடுஸ்ஸாவின் தலை வெட்டப்பட்டு
மாலைச்சுரியன் க்ரிம்ஸன் ரெட்ல் ஜூஸ் பிழிந்து
ஆயிரம் ஆயிரம் நாகங்கள் திசைக்கொன்றாய்
நெளிந்து ஓடி..
அப்படியும் அந்த பேனாவும் காகிதமும்
கல்லாய் உறைந்து கிடக்க...
டெல்ஃபிக் ஆரக்கிள் கோடாங்கி அதிர்வுகளில்
அவள் இமையின் மெல்லிய பச்சை நரம்புகள்
ஈ சி ஜி வரிகளாய்
பூக்கள் தூவப்பட்டும் இப்போது கசங்கி
நிர்மால்யமாய் தலையணை மெத்தையில்
குமிழி குமிழி குமிழி குமிழிகளாய்
எதைச்சொல்லும்?
மிச்சமாய்
ஒரு நிலாவும் அங்கு ஒரு குமிழியாய்
உதிர்ந்து கிடக்கிறது.

==================================================ருத்ரா


2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்பு நண்பரே! மிக்க நன்றி!

கருத்துரையிடுக