சனி, 4 பிப்ரவரி, 2017

ரஜனி பாபா

ரஜனி பாபா
===============================================ருத்ரா

பாபா படத்தில் நடித்ததால்
ரஜனி
ரஜனிபாபா ஆகிவிட்டார்.
இந்த "எந்திர(ன்)"வாழ்க்கையை
பொய் என எண்ணுகிறார்.
இமயமலையின்
28000 அடிகளுக்கும் மேலான உயரத்துக்கு
போய்விட்டார்.
அதனால் மக்கள்
வெறும் ஈ எறும்புகள் தான்.
கடவுள் விருந்தாளியாக‌
உங்கள் இதயத்துள் நுழைய‌
இதயத்தை தூய்மையாக‌
வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்!
உயர்ந்த கருத்து.
கனமான கீதையை
ஆனந்தவிகடன் குமுதம் போல‌
சுவையாக்கி தருகின்றார்.
செட்டிங் வைத்துக்கொண்டு
வசனம் பேசவில்லை.
ஃபைட்டிங்கின்
பன்ச் வசனங்களும் இல்லை.
தன் உள்ளத்துக்குள்
ஒரு கடவுளை
"போன்ஸாய்" விருட்சமாய்
பதியம் போட்டு
இந்த "ஆரண்ய காண்டத்தை"
அறங்கேற்றி இருக்கிறார்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களை
அள்ளித்தெளிக்கவில்லை.
எளிய முறையில்
கடவுளை தன் பேச்சால்
"படம்" பிடித்துக் காட்டிவிட்டார்.
மக்களுக்கு தேவை
வாழ்க்கையா? கடவுளா?
என்ற பட்டி மன்றங்களெல்லாம்
குப்பை தான்.
நாம் அவருக்கு கை தட்டுவோம்!
கடவுளுக்கு வாழ்க்கை தேவையில்லை!
அது போல்
மக்களுக்கு கடவுள் தேவையில்லை!
இதையும்
எங்காவது அவர் பேசினாலும் பேசுவார்.
அதற்கும் நாம்
கை தட்டுவோம்.
நம்மைப்பொறுத்தவரை.
கடவுள் ஒரு ஆள் இல்லை.
ஒரு ஆள் என்றால் தான்
அந்த "ஆள்மா" அல்லது "ஆத்மா"
மற்றும் ஆத்மீகம் பற்றி எல்லாம்
நாம் கவலைப்பட வேண்டும்.
அவர் பலப்பல ஆள்.
அவர் பெரும் ஆள்
அந்த பெரும் + ஆள் தான் "பெருமாள்"
தமிழின் கடவுள் அந்த "பெருமாள்"
எனும் மக்கள் தான்.
அவர்(கள்) படுத்திருக்கும்
பாற்கடலே
அந்த‌ ஜனநாயகம் எனும் கோவில்.
இப்படியும் ஒரு நாள்
அவர் பேசுவார்.
அப்போதும் அவருக்கு நாம் கைதட்டுவோம்!
இப்போதைக்கு இவருக்கு
ஆத்மீகம் கூட‌
வில்லன்களோடு மோத ஒரு ஆயுதம் தான்!
இந்த "ஒரு வரிக்கதை" ரெடி.
தயாரிப்பாளர்களே!
தயாராகுங்கள்!

===============================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக