புதன், 15 பிப்ரவரி, 2017

"காதலர் தினக்" கவிதை (3)


"காதலர் தினக்" கவிதை (3)

அலை
===============================================ருத்ரா

அலையா? கடலா?
எது நீ சொல்?
முட்டாளே!
ஒன்று தானே இன்னொன்று.
ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை.
ஹா!ஹா!ஹா!
யாரை ஏமாற்றுகிறாய்?
நீ
காதலா? பெண்ணா? சொல்!
இரண்டும் தான்.
அடிப்பாவி!
என்ன ஏமாற்று வேலை.
பெண்களையெல்லாம் தேடினேன்..பார்த்தேன்.
அங்கே காதல் இல்லை.
காதலையெல்லாம் தேடினேன்...தேடினேன்
அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது..
அடி முட்டாளே!
எங்காவது ஒரு இதயம் துடிக்க‌
கேட்டிருக்கிறாயா?
அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?
அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்
ஆயிரம் ஆயிரம்
ரோஜா இதழ் அடுக்குகளாய்
உணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா?
அது வரை
நீ கல் தான்.
அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்
கல் தான்.
உன் அருகே
ஒரு பச்சைப்புல்
உன்னைப்பார்த்து கேலியாய்
சிரிப்பதை புரிந்து கொள்ளும்
ஒரு மெல்லிய மின்னல்
என்று உன்னைத்தாக்குகிறதோ
அன்று
நீயே..காதலின்
கடல்.
நீயே..காதலின்
அலை.

=====================================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக