வியாழன், 27 அக்டோபர், 2016

உச்சி


உச்சி
===================================ருத்ரா
கோபுர உச்சியில்
இருந்து பாருங்கள் உங்களை!
நீங்கள் சுறு சுறுப்பின்
எறும்புகள்.
அந்த ஆண்டவர்கள் கூட‌
அங்கே பொம்மைகள்.
இரண்டு பொம்மைகள்
நாலு கை ஆறு தலைகளுடன்
பேசிக்கொண்டிருந்தன.
நமக்கு இத்தனை
கை கால்கள் தலைகள் இருந்தும்
சொர்க்க லோகத்தில்
சரியாக ஆள முடியவில்லையே.
இந்த மனிதனைப்பார்.
ஒரு தலை தான்.
இரண்டு கை இரண்டு கால்கள்
ஆனால் அவன்
நம் புராணங்களையெல்லாம்
சேர்த்து அல்லவா ஆளுகிறான்?
அப்போது
கீழே இருந்தே மனிதன் சொன்னான்.
நாங்கள் வாழ்வது நிஜ வாழ்க்கை.
நீங்கள் வாழ்வதோ
நாங்கள் செய்து கொடுத்த‌
கற்பனை வாழ்க்கை

=============================================


2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ikkaraikku akkarai.......

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

WHEN GOD CAN NOT IMAGINE A MAN ,MAN CAN IMAGINE A MILLION OF GODS.

கருத்துரையிடுக