சனி, 29 அக்டோபர், 2016

ஒரு காமிரா லென்ஸின் வழியே.....




ஒரு காமிரா லென்ஸின் வழியே.....(பாலச்சந்தர்)
=================================================ருத்ரா


ஒற்றை வரியை
சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து
பஞ்ச் டைலாக்கில்
பல சேட்டைகளுடன்
திரையை ரொப்பி
பெட்டியை ரொப்புவதே
சினிமானின் பாணி.
ஆனால்
நறுக்கென்று
சுறுக்கென்று
உள்ளம் தைத்து
காமிராவில் எழுதிய‌
பாலச்சந்தர் படங்களைப்பற்றிய
இந்த குறும்பாக்களை
மாலை தொடுத்தாலே
கிடைப்பது
ஒரு திரைப்படக்கல்லூரி.


பாலசந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்
================================================ருத்ரா இ பரமசிவன்


1
காப்பியாற்றிய சர்க்கஸில்
ஒரு காதல் காப்பியம்
சர்வர் சுந்தரம்.
2
ஆரஞ்சு பழத்தோல் கூடு
சுளைகள் களவு போனது.
நீர்க்குமிழி.
3
கடிகார வினாடி முள் முனையில்
திக் திக் திக்..கத்திகள்.
நாணல்.
4
அந்த "ரூம்" இன்னமும்
"லொக் லொக்"கில் தான்.
எதிர்நீச்சல்.
5
அண்ணா சாலையில்
நெல்லு காயப்போட்டால்...
அனுபவி ராஜா அனுபவி.
6
அன்றைய "புன்னகை" இன்னும்
"நோட்டில்"  செய்கிறது கேலி!
புன்னகை.
7
தூர்தர்ஷனின் "ஷெனாய்" மீட்டியது
மம்முட்டி பானுப்பிரியா நரம்புகளை.
அழகன்.
8
ராமன் தோளில் ஒரு ராவணன்.
வென்றது சீதையின் சாணக்கியம்.
மூன்று முடிச்சு.
9
மனைவியின் மீது தினமும்
கத்திவீசும் கயவக்கணவன்.
அவர்கள்.
10
வயதுகள் தள்ளிநின்று
வேடிக்கை பார்த்த காதல் தினவுகள்
அபூர்வ ராகங்கள்.

(குறும்பாக்கள் தொடரும் )





2 கருத்துகள்:

Unknown சொன்னது…

yes we eagerly expect the remaining balachanders creations...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

Thank you for your eagerness for my poems on Balachandar Films.I will post it tomorrow.

கருத்துரையிடுக