வெள்ளி, 28 அக்டோபர், 2016

தனிக்கொடியுடன் தனுஷ்


தனிக்கொடியுடன் தனுஷ்
====================================ருத்ரா
உள்ளே ஒரு கொடி
ஓடிக்கொண்டிருக்க‌
வெளியே
ஒரு தனிக்கொடி பிடித்து
பவனி வரும்
தனுஷ் அவர்களே
நீக்கள்
மக்களை
அவர்கள் மண்வாசனையோடு
சந்திப்பது எல்லாம்
மகிழ்ச்சிக்கு உரியது தான்.
ஆனால்
"குழல்" ஊதி எலிகளை மயக்கி
அவற்றையெல்லாம்
ஒரு வாய்க்காலில் தள்ளும் கதை
படித்திருப்பீர்கள்.
அதைப் போல பிள்ளைகளையும்
தள்ளிக்கொண்டு போக முயலுவதையும்
படித்திருப்பீர்கள்.
அப்படித்தான்
இங்குள்ள தமிழன்கள்.
இந்த எலிகளுக்கு மசால்வடை போதும்.
மண்ணாங்கட்டி ஜனநாயகம்
எல்லாம் தேவையில்லை.
பொறிக்குள் அவையே
மகிழ்ச்சியாய் மாட்டிக்கொள்ளும்.
தமிழன்
அப்படியொரு க‌ற்காலத்தில் விழுந்து
அவன் மீளவே இல்லை.
நான் ஆணயிட்டால் என்று
ஒருவர் சவுக்கு சுழட்டியதில்
சுருண்டு விழுந்தவர்கள்
இன்னும் எழுந்திருக்கவே இல்லை.
இந்த "தொடரி"இன்னும் தொடர்ந்து
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது
தமிழன் தலைகளே தண்டவாளம்.
தமிழன் வரலாறு
சிந்தனை வறண்ட ஆறாய்
ஆனது தான் மிச்சம்!
உங்கள் தனிக்கொடி
திக் விஜயம் எங்களுக்கு
திக் திக் என்று இருக்கிறது.
இந்த தமிழனையும்
தமிழ் நாட்டையும்
காப்பாற்றப்போவது யார்
என்று தெரியவில்லை.
"அவர்" சொன்னதைத்தான்
நாங்களும் சொல்கிறோம்.
ஆண்டவன் இருந்தாலும் சரி!
இல்லாவிட்டாலும் சரி!
"அந்த ஆண்டவன் தான்
காப்பாற்ற வேண்டும்!"

==================================



2 கருத்துகள்:

Unknown சொன்னது…

this nonjan dhanush joker siva erratic simbu...and many may pose a THREAT to tamilnadus development...if they turn their eyes on politics...
already karuna mgr and jaya from the filmworld had spoiled tamil nadu..

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

The film culture corrupted the politics here. Real Politics vanished from India because of these pseudo politicians. Vote banks are under bulk purchase by them.

கருத்துரையிடுக