ஞாயிறு, 23 அக்டோபர், 2016

(நயன் தாரா)

பார்வைகளின் பூ மழையே
============================================ருத்ரா இ பரமசிவன்.
(நயன் தாரா)

உங்கள் பெயரை என்னால்
இப்படித்தான் பெயர்க்க முடிந்தது.
நீங்கள் நினைத்தால்
உங்கள் விழிகளின் வியர்த்த நடிப்பில்
எல்லா உலகங்களையும்
பெயர்த்தெடுத்து
ரசிகனின் இதயரோஜாவாக்கி
உங்கள் கூந்தலில்
சொருகிக்கொள்ள முடியும்.
"ராமராஜ்ஜியத்தில்"
ஆந்திராவுக்குள்
ஒரு சூறாவளியை கிளப்பினீர்கள்.
தமிழ் நாட்டில்
உங்களைப்பற்றிய
கிசு கிசுக்களின்
கொசுக்கடிகளின் ஊடேயும்
"ஹேட் ட்ரிக்" அடித்தீர்களே.
இங்கு உள்ள‌ வெள்ளித்திரை
பத்மினி சாவித்ரி ஊர்வசிக்கு அப்புறம்
சஹாரா பாலைவனம் ஆகிவிட்டது.
ஜோதிகாவின் அற்புத முகரேகைகள்
கண்டோம்!..ஆனால்
நடிப்பின் சிகரம் தொடும் முன்னே
அந்தநடிப்பின் வெண்ணிலவு
வீட்டுக்குடும்பத்தின் ஒரு
சிம்னி விளக்காகி
இல்லறம் எனும் நல்லறம்
எனும் அன்புக்காவியத்தின்
அடர்ந்த "சூரியனின்"
பொன் திரைக்குள் போர்த்துக்கொண்டது.

உங்களுக்கு
நடிகர்கள் ஒரு பொருட்டல்ல.
அவர்கள் உங்கள் முகத்தில்
"கண்ணாடி பார்த்து"க்கொண்டே
நடித்து
கட் அவுட் பால்குடங்களின்
ஜிகினாலோகத்துள்
நுழைந்து விடுவார்கள் போலிருக்கிறது.
ஆனாலும் "நானும் ரவுடி தான்"ல்
"விஜய நயன் தாரா சேதுபதி"
என்று நடிப்பின் பிழம்பு
ஒரு நேர்கோட்டில் வந்து
தியேட்டர்களையெல்லாம்
ஒரு அள்ளு அள்ளி விட்டதே.

நயன் தாரா அவர்கள் நடிப்பின்
பரிமாணம் ஒரு புதுமைப்பாணம்!
அது ஊடுருவாத உணர்ச்சிக்காடுகள் இல்லை.
கணக்கற்ற பட்டைகள் தீட்டப்பட்ட
வைரத்திலிருந்து வரும்
கணக்கற்ற நயனக்கதிர்கள்
பார்வைகள்! பாவனைகள் !

பெண்ணியத்தின் சராசரி
கண்ணீர்ப்பூக்களாக இல்லாமல்
அந்த மகரந்தங்களோடு
மனத்தின் ஒரு
வெடி மருந்துகிட்டங்கியும்
பொதிந்து இருக்கிறது.
பாத்திரங்கள்
அழகு நிரப்பிக்கொண்டு மட்டும்
வரவில்லை.
அதிர்சசியூட்டும் யதார்த்தமும்
உள்ளடக்கிக்கொண்டிருக்கிறது.
"மாயா"
"நானும் ரவுடி தான் "
"தனியொருவன்"
என்ற படங்களில்
அவரது மும்முனை வெற்றி
அடுத்தடுத்து வரும்  படங்களிலும்
ஒரு வீச்சோடு வருகிறது.
சமுத்திரத்தின் திரைகள் எனும்
 அலைகளில்
ஆண் அலை  பெண் அலை
உண்டு என்கின்றனர்.
சினிமாத் திரை எனும்
இந்த அலைகளில்
நடிப்பின் வானம்
நயன தாரா எனும் பெண் அலையாய்
பொங்கி எழலாம்.
எத்தனை நாளைக்கு தான்
இதை வெள்ளித்திரை என்று
சொல்லிக்கொண்டிருப்பது?
அதை பிளாட்டினத்திரை
என்று சொல்லும் "பொற்காலமும்" வரலாம்
நயன்தாரா அவர்களால்.!


===================================================
















2 கருத்துகள்:

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

My dear Friend
I appreciate your social anger.But being a poet Iam keeping equa-animity.Art of life and art of art are different.However I would like to chrish your sentiments.Thank you for your corncern on me as a poet.

Unknown சொன்னது…

bro
you can also my comments on your OCTOBER ....

கருத்துரையிடுக