ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்  (2)


பாலச்சந்தர் படங்கள் பற்றிய குறும்பாக்கள்  (2)
======================================================================
ருத்ரா இ.பரமசிவன்



11
கம்பியில் குத்தி குத்தி சேகரித்த‌
கடிதங்களில் "காதலுக்கு"வடைமாலை.
வெள்ளிவிழா.

12
நீதியின் நிழல் துரத்தும் ஒளியே
இங்கு என்றும் உருகாத மெழுகுவர்த்தி.
ஞான ஒளி.


13
கண்கள் இல்லை..இருப்பினும் அந்த‌
மிடுக்கும் கணக்கும் குறி தப்பவில்லை.
மேஜர் சந்திர காந்த்.

14
தூக்கமாத்திரைகளில் இன்னும்
விழித்துக்கொண்டிருக்கிறது..அந்தக்காதல்!
தாமரை நெஞ்சம்.

15
தன் குழந்தையைக் காக்க அந்த தாய்க்கு
வந்தது தொப்பூள்கொடியோடு ஒரு துப்பாக்கி.
காவியத்தலைவி.

16
ராகங்கள் கலந்து கொண்டபோது
காதலின் முகவரி தொலைந்து போனது
சிந்து பைரவி.

17
"நிலா "பாட்டில்
கவிதையும் இசையும் காக்டெய்ல் ஆனது.
பட்டினப் பிரவேசம்.

18
அந்த தேர்தலின் அர்த்தமே
ஒரு டம்ளர் தண்ணீர் தான்.
தண்ணீர் தண்ணீர்.

19
குற்றாலத்தின் வெள்ளியருவியில்
சிவப்புக்கண்ணீர்.
அச்சமில்லை அச்சமில்லை.

20
ரஜனிமீசைக்குள் இப்படியொரு லொள்ளா?
வயிறு புடைக்கும் சிரிப்பு விருந்து.
தில்லு முல்லு.

21
தாலிக் கயிற்றில் ஒரு
"கயிற்று இழுப்பு" போட்டி.
இரு கோடுகள்.

=================================================================

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

there is a criticism against balachandeer..
he GLORIFIED unnatural love....example...ABOORVA RAGANGAL...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

when exceptions loom large the law looks its own face ugly

கருத்துரையிடுக