செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

ஸ்டாலினுக்கு ஒரு வாழ்த்து

ஸ்டாலினுக்கு ஒரு வாழ்த்து
==========================================ருத்ரா

திமுக என்பது
ஒரு பசிபிக் பெருங்கடல்
மட்டும் அல்ல!
அது பசிக்கும் பெருங்கடல்.
அதன் தமிழ்ப்பசிக்கு
உணவு
மீண்டும் தமிழ்ப்பசியே!
கலைஞர் என்ற பெருந்தமிழன்
கட்டிக்கோர்த்த இக்கட்சியை
மீண்டும் உறுதியாய்
கட்டிக்கொடுத்த‌
அரசியல் சிற்பி அருந்தலைவர் ஸ்டாலின்.
அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
தமிழ்மக்களிடையே
திராவிட நாகரிகத்தின் ஊற்றை
சுரக்க வைத்துக்கொண்டிருந்த‌
பூங்காற்றே!
தருணம் அழைத்தால்
புயல் காற்றாயும் ஆகிவிடும்
வல்லமை பெற்ற செயல்வீரரே!
சித்தாந்தங்கள் எல்லாம்
சிந்தனைகள் எல்லாம்
லட்சியங்கள் எல்லாம்
உரிமைக்கு எழும் ஆற்றல்கள்
எல்லாம்
ஒன்று திரட்டி
ஒன்று கூடி நின்று
இயக்கம் காட்டிய தலைவரே
தொடரட்டும் உங்கள்
சீரிய பணி!
இங்கு
ஓட்டுகள் எல்லாம் நோட்டுகளாய்
அடையாளம்
மாறி விட்ட பொழுதில்
அவற்றை
ஜனநாயகம் எனும்
உயிர் பூசிய வாக்குகளாய்
வார்த்தெடுக்கும் பணிக்குள்
உங்களை
வார்த்துக்கொண்ட தலைவரே
வாழ்க உங்கள் அரசியல் லட்சியம்!
அன்று ஒரு நாள்
உங்கள் சட்டை கிழிந்தது!
கிழிந்தது உங்கள் சட்டை அல்ல!
கிழிந்தவை
இவர்கள் சட்டதிட்டங்கள் தான்.
பொம்மை ஆட்சிகள் தொலைந்திடட்டும்.
தமிழன்
உண்மை ஆட்சி சுடர்ந்திடட்டும் என்று
உறுதிப்பயணம் செல்பவரே!

மாநில சுயாட்சியின் நிழலே
மத்திய கூட்டாட்சி.
மத்திய கூட்டாட்சியின்
உயிர்ச்சி நிறைந்த வேர்களே
மாநில சுயாட்சிகள் .

இதை அறிந்தால்
அன்றே "அண்ணா"சொன்ன
அந்த "ஆட்டுக்கு தாடி" தேவையில்லை
என்பதை புரிந்து கொள்ளலாமே.
அப்படியிருந்தும் அதை
சிங்கப்பிடரியாய் ஒரு அட்டை செய்து
மாநிலங்களுக்குள்
(அதாவது எதிர்க்கட்சிகள் ஆளும்
மாநிலங்களுக்குள் )
எல்லாம் போய்
பூச்சாண்டி காட்டுவது
எந்த வகை ஜனநாயக நியாயம்?

ஸ்டாலின் அவர்களே
உங்கள் கருப்பு (க்கொடி ) அலைகள்
நெருப்பு அலைகளாய்
அதை எதிர்த்து ஒரு வெளிச்சம் காட்டியதே!
அது
உங்கள் தலைமையின் வரலாற்று ஏட்டின்
முதல் அத்தியாயம் அல்லவா?

அது போல்
அவர்களின் எத்தனையோ
உளுத்துப்போன
பஜனைப்பாடல்களின் நடுவே
"எதிர் பூபாளங்களை"
 எழுச்சி விடியலுக்கு
பண் அமைக்கும் பண்பு
வீரம் சிலிர்த்து நிற்கிறது
உங்கள் வழி காட்டுதலில்.

எதிர்க்கிறேன் என்று
சிறுபிள்ளைத்தனமான
சிலரால்  
சோப்புக்குமிழிகள்
ஊதப்படும்போதே
உடைந்து போவதை
காணப்போகிறீர்கள் !
நெஞ்சுரம் கொண்ட தலைவரே!
நங்கூரம் இட்டு நில்லுங்கள்
உங்கள் உறுதியான கொள்கையில்.


அத்தனை கோடி தமிழர்களும்
உங்களுக்கு
தோள் கொடுத்து அறிவெனும்
வாள் எடுத்து போரிடுவார்.
சமூக நீதிகாக்கும்
சரித்திரம் படைக்கவும் செய்திடுவார்.
வாழ்க வாழ்க வாழ்க!
தலைவர் ஸ்டாலின் வாழ்கவே!

===================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக