ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

"செக்கச்சிவந்த வானம்..."

"செக்கச்சிவந்த வானம்..."
===========================================ருத்ரா

"ராக்கம்மா கையத்தட்டு"
என்று அந்த நெருப்பு நாக்குகளோடு
நாக்குகளாக
இசையை தாளம் தட்ட வைத்த‌
"தளபதி"
இங்கே நான்கு மண்டலங்களாக‌
பிரிக்கப்பட்டிருக்கிறது போலும்.

இங்கும் வானம் எல்லாம்
கீறல்கள் விழுந்த சிலேட்டு தான்.
"டுமீல் டுமீல்"களால்!
அது என்ன ஒரு நடிப்புக்கடலை
"காக்கி உடுப்புக்குள்"
திணித்திருக்கிறார்கள்.
விஜய்சேதுபதி
கதாநாயகன் பாதி
வில்லன் பாதியா?
மிடுக்கும் கடு கடுப்பும் தான்
அவர் பாத்திரத்தில் இருக்கவேண்டியது.
இருப்பினும்
அதற்குள்ளும்
கடுக்காய் கொடுக்க
ஏதாவது வைத்திருப்பார்.
அருண்குமார்
வழக்கமாய் ஒடிசலாய் அழகாய்
வந்து போவதே போதும்.
அப்பா விஜயகுமார் முத்திரைகளை
இப்படத்தில் பதிக்க
திட்டம் உண்டா என்பது
மணிரத்னம் அவர்களின்
"ஆக் ஷன்" "கட்"ஆணைகளில்
அல்லவா இருக்கிறது.
அரவிந்த சாமியின்
"ரோஜா பிஞ்சு" முகம்
சமீபத்திய முற்றிய "ஹீரோயிச வில்லன்"
வேடங்களுக்கு பின்
ஒரு புதிய மெருகுடன்
ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது.
இதில் ஒரு வினோத ஸ்டைல் கம் மேன்னரிசம்"
இருக்கலாம்.
சிம்பு
"விண்ணைத்தாண்டி வருவாயா"வுக்குப் பிறகு
ஒரு நெருப்புவளையத்தையே
ஊதிவிட்டு வந்து விட்டார் என்று சொல்லலாம்.
சிம்புவுக்கு "கிசு கிசுக்களா?"
அல்லது
கிசு கிசுக்களுக்கு சிம்புவா?
வரதன் என்ற பெயரிலேயே
ஒரு சுவாரஸ்யமான பாத்திரம் பளிச்சிடுகிறது.

கதாநாயகிகளைப்பற்றி
கட்டுரைக்க‌
அவர்களின் கிளுக் வசனங்களும்
மற்றும்
சைக்கடெலிக் நிழல் மூட்டங்களில்
அவர்களின் "உடல் மொழிகளும்"
மிகவும் நுணுகி அணுக வேண்டியது
அவசியம்.

மணிரத்னம் அவர்களின்
திரைஇயக்கம்
நம் சினிமாக்கலைப்படைப்பாளிகளுக்கு
ஒரு பொக்கிஷம்.
ஒரு இருட்டையே கூட‌
ஒரு முழு நீள ஃப்ரேமாக‌
ஓடவிட்டு
நறுக்கென்று ஒரு தீம் சொல்லும்
குறும்படம் ஆக்கிவிடுவார்.
கதாபாத்திரங்கள்
சொற்களை கத்திரிபோட்டு போட்டு
ஒலிப்பது இருக்கலாம்.
அல்லது
கரும்பைச்சவைத்து
துப்பும் இனிமையான
மௌனம் கலந்த நெடியும் இருக்கலாம்.
அவர் படத்தை
மற்றவர்கள் காப்பி அடிக்க முடியாது.
ஆகா சுவையான ஆவி பறக்கும்
காப்பி அல்லவா இது
என்று குடிக்கலாம்.
திறமையான கூட்டணி இந்த‌
செக்கச்சிவந்த வானம் என்று
சொல்லலாம்.

==================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக