ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

பியார் பிரேமா காதல்


பியார் பிரேமா காதல்
==============================================ருத்ரா

இது போல் தான்
அன்று "பாபி" என்று ஒரு படம்.
ராஜ்கஃபூரின் மகன் ரிஷிகபூரும்
டிம்பிள் கபாடியாவும்
வண்ணமும் இசையுமாய்
கலக்கினார்கள்.
ஆர்.டி .பர்மன் மெட்டமைப்புகளில்
எல்லா இசைச்சொர்க்கங்களும்
நம் பூமிக்கு இறங்கி வந்துவிட்டன.
காதல் என்பதற்கு
காளிதாசனைக்கொண்டோ
கம்பனைக்கொண்டோ
மயிற்பீலிகள் கொண்டு தடவி
எழுத்துக்கள் அலுத்துக்கொண்டபின்
உள் துடிப்புகளின் மேனி உரசல்கள்
ஒரு ஜெனடிக் டைனாமிக்ஸை
கச்சாபிலிம்களில் "வச்சு செய்தார்கள்".
அதுவே இந்தப்படம்.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
இளம் பிஞ்சு யுகம்
இப்படி இனிப்பாய்
ஒரு எரிமலைக்குழம்பை
தாளித்துக்கொட்டி
தாவு தீர்த்துக்கொண்டது.
வயதுகள் விலக்கில்லை.
எழுபது எண்பதுகளுக்குள்ளும்
இந்தக் "கேரளாவின் காட்டு வெள்ளம்"
புரட்டிப்போடலாம்.
1960 களில்
கோயமுத்தூர் நாஸ் தியேட்டரில்
நான் பார்த்த
"ஜப் பியார் கிஸி சே ஹோதா ஹை.."
படம் தான்
இங்கும் விஷுவலைஸ் ஆகிறது.
படத்தின் பெயரில் வரும் பாட்டு
இன்னும் என் இதயம் வருடுகிறது.
அது இசையா?
அது காதலா?
எல்லாமும் தான்.
படம் பார்த்து கல்லூரி திரும்பிய பின்
கண்களுக்குள் வட்டம் வட்டமாய்
அமுத நிலவுகள்!
"தேவ் ஆனந்தும் ஆஷா பரேக்கும்"
இமை முட்டி நின்று கொண்டே இருந்தார்கள்.
அது என்ன
காதலின் விளிம்பில்
ஆஷா பிரேக்கின் அழகிய கண்களிலும்
கண்ணீர்க்கோடுகள்?
அதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு ஆஆஆஆழத்தில்
விழுந்து கொண்டே இருக்கிறேன்.

ஆனால் இந்தப்படம்
நாலும் மூணும் ஏழு தான்
என்று
காதல் கணக்கை
அப்படியே காட்டுகிறது.
இந்த கம்பளிப்பூச்சிகள் எல்லாம்
என்றைக்கு
பட்டாம்பூச்சிகளாய்
பரிணாமம் அடையப்போகின்றன?

======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக