வியாழன், 9 ஆகஸ்ட், 2018

தலைகுனிந்துகொள்ளடா!

தலைகுனிந்துகொள்ளடா!
________________________________________________

இவர்களுக்கு அவர்கள்
தமிழின விரோதிகள்.
அவர்களுக்கு இவர்கள்
தமிழின துரோகிகள்.
இப்படித்தான்
நம் சேர சோழ பாண்டியர்கள்
தமிழை
ஒரு சுடுகாட்டுக்கு
கொண்டுபோனார்கள்.
நம் தமிழின் வரலாற்றில்
இந்த எலும்புக்கூடுகளும்
கபாலங்களும் தான்
இன்றைய‌
எட்டுத்தொகை பத்துப்பாட்டுகள் ஆயின.
நீயா? நானா?
என்ற வாள்விளையாட்டில்
சிரச்சேதம் ஆனது
நம் அருமைச்செந்தமிழே!
தமிழன் என்று சொல்லடா!..நீ
தலை குனிந்து கொள்ளடா!

_________________________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக