ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

விசுவரூபம் 2

விசுவரூபம் 2
==================================================ருத்ரா

கமல நாயகன்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
என்று
அகல நின்று கொண்டு
படத்தை முடித்துவிட்டார்.
உளவாளிக்கதையில்
என்னத்தை உணர்த்த முடியும்?
வேண்டுமானால்
நம் அந்த புனித‌
"சாரே ஜாஹாம் ஸே அச்சா"வை
படம் நெடுக இசைக்கீற்றில்
இழைத்திருக்கலாம்.
ஆனால் இப்போது
தேசம் தேசவிரோதம் என்ற கருத்துக்கள்
எல்லாம்
அரசியல் ஆட்சி வாதிகளிளின்
வசதியான
சட்டைப்பை சாமான்கள் ஆகிவிட்டன.
எப்போது வேண்டுமானலும்
அதிலிருந்து
சிகரெட்டுகளையும் தீப்பெட்டிகளையும்
எடுத்துக்கொள்வது போல்
ஜனநாயகத்தின் ஆத்மா ஒரு எதிர்க்குரலாய்
சிலிர்க்கும் போதெல்லாம்
அந்த "சட்டப்பை"யிலிருந்து
துப்பாக்கிகளையும் லாட்டிகளையும்
எடுத்து பூச்சாண்டி காட்டிக்கொள்கிறார்கள்
அது சரி!
இந்தபடமும் அந்த நுணுக்கத்தனமான‌
போர்களை
பூதக்கண்ணாடி கொண்டு
அழகாய்த்தான் காட்டியிருக்கிறது.
வழக்கமான வில்லத்தனங்களை விட‌
செயற்கையாய் ஒரு சுனாமியை உருவாக்கி
அழிக்க நினைக்கும்
அந்தக் கொடூரத்தை
நன்றாகவே கோடு போட்டு காட்டியிருக்கிறார்.
கிருஷ்ணன்
இன்னொரு விஸ்வரூபம்
காட்டியிருந்தால்
வியாசரின் மகாபாரதப்"படம்" கூட
"ஃ ப்ளாப்" ஆகியிருக்கலாம்.
கமலின்
இரண்டாவது விசுவரூபம்
அப்படி 
ஒரு "ஆன்டி க்ளைமேக்ஸ்"தான்.
ஏனெனில்
அவர் அரசியலில் இன்னும்
ஊசிவெடிகளைத்தான்
வெடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்திலும் அவர்
ஆனை வெடிகள் ஏதும் வெடிக்கவில்லை.

=============================================








2 கருத்துகள்:

vimalanperali சொன்னது…

நல்ல விமர்சனம்,படம் பார்க்க வேண்டும்,,,/

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி நண்பரே

கருத்துரையிடுக