வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மக்கள் பிரதமர் வாஜ்பாய்


மக்கள் பிரதமர் வாஜ்பாய்
========================================ருத்ரா

மக்கள் பிரதமர் வாஜ்பாய்
அவர்களின் மறைவு
பேரிழப்பு என்பது
உன்மையிலும் உண்மை.
அவர் கட்சி என்ன என்பது
இந்த மக்களுக்குத் தெரியும்.
அவரைப்பொறுத்து
இந்துவுக்குள் இருப்பது
முதலில் இந்தியா அப்புறம் தான்
கௌடில்யரின் சாஸ்திரங்கள்.
முதலில் மனிதன்
அப்புறம் தான் வர்ணங்கள்.
மற்ற மதங்களுக்குள்ளும்
அவர் இந்தியாவைத்தான்
பார்த்தார்.

ஞானப்பழத்துக்கு
ஒரு தெய்வம் மயில் ஏறி
உலகம் சுற்றியது.
சுற்றியது சுற்றியது
சுற்றிக்கொண்டே இருந்தது.
இன்னொரு தெய்வம்
இருக்கும் இடத்தில்
உலகத்தையே கண்டது.
ஞானத்தின் ருசியும் தெரிந்தது.
இங்கே ஞானப்பழம் என்பது
நம் சமூகநீதியும் ஜனநாயகமும் தானே.
அவர் இந்த மக்களை
ஜனநாயக
அடையாளங்களாகத்தான் மதித்தார்.
வரலாற்று மைல்கல்களை
மாணிக்க கல்களாக மாற்றிய பெருமை
அவருக்கு உண்டு.

வாஜ்பாய் அவர்கள்
இந்தியாவில் இருந்துகொண்டே
உலகத்தை "அசையச்"செய்தார்.
நம் மதிப்பிற்குரிய மோடி அவர்களோ
உலகத்தைச் சுற்றி சுற்றி வரும் ஆர்வத்தில்
நம் இந்தியாவும் கூட‌
அவருக்கு
ஒரு அயல் நாடு ஆகிப்போனதோ?
என்ற ஐயத்தை
விதைத்துக்கொண்டிருக்கிறார்.

ஓட்டுக்கு மட்டுமே அவர் குரல்
ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது.
அவரது ஆத்மீக மௌனம் மட்டுமே
மக்களின் சலசலப்புகளுக்கு
கிடைக்கும் பதில்.

இங்கு ஒப்பீடு செய்வது முறையில்லை தான்.
வாஜ்பாய் அவர்களை தினம் தினம்
ஞாபகப்படுத்துகிறாரே
நம் மதிப்பிற்குரிய‌ மோடி அவர்கள்!
என் செய்ய?

எங்கோ இருட்டுக்குள் இருந்துகொண்டு
சவுக்கை சுளீர் சுளீர் என்று
ஆர் எஸ் எஸ் விளாசுவது இப்போது
மக்களின் மேல்
ஏன் ரத்தவிளாறுகள் ஆகவேண்டும்?
வாஜ்பாய் அவர்கள்
அந்த சவுக்குநுனிகளை
பூக்களாக்கி
ஜனநாயக செண்டு ஆக்கி
புன்முறுவலோடு நீட்டினார்.

பசுவோடு சேர்த்து மனிதனைப்பார்த்தார்.
இப்போதோ
மனிதனின் "ஆம்புலன்ஸ்களை" எல்லாம்
பசுக்களே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.
குமுதத்தில் வரும் ஆறு வித்யாசங்களை
கண்டு பிடிப்பது அல்ல இது.
மானிட வர்ணமற்ற ஜனநாயகத்தின்
ஆறாத புண்களை ஆற்றுவதற்கு
படும் அல்லல்களே இவை.

வாஜ்பாய் அவர்களின் "தங்க நாற்கரம்"
ஒரு ஆச்சரியமான பிரமையை
நம் அரசு நாற்காலியில்
நிழல் காட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில்
ஓடும் வாகனச்சக்கரங்கள்
நம் தேச வளர்ச்சியின்
கோடி கோடி"அசோகசக்கரங்களாய்"
உருண்டு கொண்டிருக்கின்றன.
மனிதநேயம் மிக்க வாஜ்பாய் அவர்களே!
நாங்கள் தேசியக்கொடியேற்றும் போதும்
நடுவில் சுழலும் அந்த அசோக சக்கரம் கூட‌
உங்கள் முகமே!உங்கள் அகமே!..அது.
எதிர்க்கட்சி மற்றும் மதக்கட்சி
என்ற சாயமே தோயாத‌
மானுட மணங்கமழும் கட்சியாய்
அல்லவா நீங்கள் நிறைந்து நின்றீர்கள்.

"உங்கள் ஆத்மா சாந்தியடைய‌
நாங்கள் பிரார்த்திக்கிறோம்"

இந்த சம்பிரதாய மொழி உங்களுக்குரியது.
அந்த மொழியில்
எங்கள் அஞ்சலிகளை இங்கு
சமர்ப்பிக்கின்றோம்!

=================================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக