வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஓஷோ

ஓஷோ

======================================ருத்ரா



அறிவு கொஞ்சம் கூர்மை தீட்டி

காமக்காடுகளை

பிருந்தாவன தோட்டம் ஆக்கி

கடவுளர்களுக்குப்பதில்

இந்த மனிதர்களை அங்கே

ஓட விட்டு

தன் ரன்னிங்க் கமெண்ட்ரியை

புத்தகங்களாக்கினாலும் போதும்

டாலர்கள் குவியும்.

இவர்களுக்கு

"செக்ஸில் பூஜை"

சில ஆங்கில ஃ பிரேஸ் களுடன்

எழுதிக்காட்டினால் போதும்.

"பெஸ்ட் செல்லர் " வரிசைக்குப் போய்விடும்.

சம்ஸ்கிருத வார்த்தைச்  சிணுங்கலுடன்

சில பத்திகளை

செருகி விட்டால் போதும்

இந்திய அறிவு ஜீவிகளுக்கு

செமத்தீனி தான்.

மறந்தும்

சமுதாய ப்ரக்ஞை

அது இது என்று

இந்த ஞானி

எழுத்துக்களை உருட்ட விடுவதில்லை.

அப்படி எழுதினாலும்

உலகத்திலேயே உயர்ந்த ஞானம்

"தனித்துவம்" தான் என்பார்.

பொது நீதி சம நீதி எனும்

ஆபாசங்களை கலக்கல் ஆகாதென்பார்.

உடற்கலவிகளால்

உயிர் கழுவிக்கொள்ளலாம் என்பார்.

சமுதாய வலைகளை

அறுத்தெறிந்து

"ஆத்மா" என்ற மாய வனம்

புகுந்திடுங்கள் என்பார்.

அழுகிய மதக்கருத்துகளுக்கு

அலங்காரம் செய்வதே

அவர் எழுத்துக்களின் வேலை.

மேட்டுக்குடி மக்களின்

புத்தக அலமாரியை

இந்த குப்பைக்கிடங்குகள் தான்

"இன்டீரியர் டெக்கரேஷன்" என்ற பெயரில்

ரொப்பிக்கொள்கின்றன.

என்ன

உங்கள் மூளைக்காட்டிலும்

இந்த "சீக்குப்"பிடித்த

மேகக்கூட்டங்கள் தானா?

இந்த வெற்று இலைக்காகிதங்களைத்

தின்று கொழுக்கும்

"புழுக்கூட்டு"மண்டலங்களாய்

தொங்கித் தூங்காதீர்கள்

ஓ! அறிவு ஜீவிகளே!

சமுதாய முரண்களை

அக்கினிச் சிறகுகளின்

இலக்கியங்கள் ஆக்கும்

மறு பக்கம் நோக்கி

கொஞ்சம்  ஊர்ந்து வாருங்கள்.

இந்த "ஃ பேண்டாசி" பலூன்களில்

ஊஞ்சல் ஆடும்

ஏமாற்று வித்தைகள்

போதும்!போதும்!



=======================================================

https://vellaikkaakithangal.blogspot.com/

தேதி 15.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக