சனி, 18 ஆகஸ்ட், 2018

இப்போது கடவுளை நம்புகிறீர்களா?


வக்கிரங்கள்
===================================================ருத்ரா

வெள்ளத்தைப்பார்த்தீர்களா?
இப்போது கடவுளை நம்புகிறீர்களா?
கடவுள் உங்களை
எப்படித் தண்டிக்கிறார் என்று
தெரிந்து கொண்டீர்களா?
என்று
சில ஊசவடைகள்
நாறும் பழமைவாதத்தை ஊசியேற்றுவதை
கண்டிருப்பீர்கள்
என நினைக்கிறேன் நண்பர்களே!
இது ஒரு ஃப்ரீக் ஃபினாமினன் என்பதை
இயற்பியல் அறிஞர்கள் அறிவார்கள்
இந்த வெள்ளத்தை  வைத்து
கேரளாக்காரர்களை காவியால் போர்த்த‌
இங்கே நமது
நண்பர்கள் சிலர்
தங்கள் சிந்தனை வக்கிரத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதற்கு சில பங்காளிக்காய்ச்சல்காரர்களும்
பதாகை  தூக்கியிருக்கிறார்கள்.
இந்த பூமி திடீரென்று
துருவத்தை மாற்றிக்கொண்டு கூட‌
சுழலாம்.
அப்போது நம் கண்டங்களே கூட‌
கண்ட துண்டங்களாகலாம்.
டெக்டோனிக் ப்லேட் மூவ்மெண்ட்ஸ் என்பது
இயற்பியலின் ரம்மி ஆட்டம்.
சீட்டுகள் மாறுவது போல்
பூமித்திட்டுகள் மாறும்.
லட்சக்கணக்கான வருடங்களின்
இடைவெளிகளில் எதுவும் நடக்கலாம்.
பரசுராமர் கோடாலியை எறிந்து
கேரளம் எனும்
கடவுள் தேசத்தை ஆக்கியதாக
"சப்பளாக் கட்டை"தட்டுபவர்கள்
ஏதேனும்
இன்னொரு அங்குசத்தை எறிந்து
வெள்ளத்தை அடக்கலாமே!

பாஷ்யக்காரர்களும் ரிஷிகளும்
கடவுளை
இன்னும் பிண்டம் பிடிக்கமுடியாமல்
இது தான் அது
இல்லை
அது தான் இது
இல்லை
இதுவும் இல்லை அதுவும் இல்லை அது
ஒருவேளை இல்லையோ என்னவோ என்று
"சோம" பித்தத்தால்
கல்பம்  சங்கல்பம் என
"ஸ்லோக "ஜந்துக்களாய்
நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்
புழு பூச்சி விலங்கு என்று
பரிணாமம் அடைந்து
"அறிவு"வெளிச்சத்தால்
எப்போது நாசா அனுப்பிய
விண்கோள் மூலம்
சூரியனை "ப்ரதட்சிணம்"
வரப்போகிறார்கள்.
கேட்டால்
"ஆதித்ய ஹ்ருதயம்" கைவசம்
இருக்கிறது என்று
ஆரம்பித்து விடுவார்கள்
அதை வைத்து அன்றே
அந்த வெள்ளத்துக்கு
அணை கட்டலாமே.
இப்போதும் கூட
அவர்கள் நிதி திரட்டலாம்.
வருண பகவானுக்கு
வராதே வராதே என்று
"ஹோமம்"நடத்த!

===================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக