ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

காகிதம்.

காகிதம்.
============================================ருத்ரா

"அன்பே!
ஏன் அவநம்பிக்கை கொள்கிறாய்?
நம் காதல்
நிச்சயம் கரையேறும்.
வானம் பிளந்து ஊற்றட்டும்.
மண் சரிந்து மாயட்டும்.
தெளியும்போது
காதலின் நம் பளிங்கு எழுத்துக்கள்
பளிச்சிடும்.
அதிலிருந்து தான்
தினச்சூரியன்கள் முளைக்கும்.

இப்படிக்கு
உன்..

யாருக்கு யார் எழுதிய கவிதையோ!
நீரில் அழிந்தும் அழியாததும் ஆன‌
அந்த வரிகள்
கரை ஒதுங்கின.

அந்த கேரள வெள்ளத்து
மீட்பு படையினரிடம்
பத்திரமாக மீட்கப்பட்டது
எழுத்துக்களில் கருக்கொண்ட‌
அந்த காகிதம் மட்டுமே!

==========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக