புதன், 15 ஆகஸ்ட், 2018

ரஜனியின் பெருங்கனவு

ரஜனியின் பெருங்கனவு
==================================================ருத்ரா

கலைஞருக்கு
இரங்கல் அஞ்சலி செலுத்தும்போது
ரஜனி அவர்கள்
திராவிட இனமே புல்லரிக்கும் படியாய்
ஒரு கருத்து சொன்னார்.
எம்ஜியார் படத்தின் அருகேயே
கலைஞரின் படத்தையும் வைத்து
விழாக்கொண்டாடும்
நேரம் வந்து விட்டது என்றார்.
கலைஞரால் தான் எம்ஜியார் பிரிந்தார்
என்ற கருத்தும்
எம்ஜியாரால்
கலைஞர் இல்லாமல் திராவிடத்தை
உச்சரிக்கக்கூட முடியாது
என்ற கருத்தும்
அங்கே மௌனமாக
ஒரு "மோதலை" சிதறச்செய்து
அதிலிருந்து தமிழர்கள் என்ற‌
பேரினத்துக்கு
ஒரு ஆற்றல் பிழம்பை
இழைய விட்டது போல் தான்
அது இருந்தது.
அதற்குள் மோடியும் அமித்ஷாவும்
இருப்பார்களோ
என்ற சந்தேக ஈக்களையெல்லாம்
விரட்டிவிடுவோம்.
வரலாற்றைப் பின்புறமாக‌
திருப்பிப்பார்த்தபோது
அன்றைய ஒரிஸ்ஸாவின் முதலமைச்சர்
பிஜு பட்நாய்க் அவர்கள்
விதை ஊன்றியது தான்.
திராவிடநாடு திராவிடருக்கே
என்ற கொள்கையெல்லாம்
தேவையில்லை.
ஏனெனில்
சிந்து வெளி அரப்பாவின்
"நகர அமைப்பு" சிதைவுகளும்
அந்த முத்திரைக்குள் ஒலிக்கும்
"நன்னன்"போன்ற பெயர்களும்
சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே
நாம்
திராவிட இந்திய தமிழர்களாகத்தான்
இருந்திருக்கிறோம்
என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டன.
இப்போது வ‌ழங்கும்
எல்லா இந்திய மொழிகளும்
தமிழின் நிழலில் ஒதுங்கியிருக்கலாம்
என்று ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள்.
திரை எனும் கடலலைகளையும்
திறம்பட ஆண்டவனே
அந்த "திரைவிடன்".
அவன் அலையிடை சென்று
கொண்டு வந்த ஒலிப்புகளை
"மறை"மொழி என்றான்.
தன்னிடம் உள்ள‌
தமிழ் எனும் "நிறை"மொழி
வாழும் வாழ்க்கையைப் பேசியது.
அந்த அயல் ஒலிப்புகள்
வாழும்போதே
வானம்பார்த்து கற்பனைகளை
பேசியது.
அந்த மறைமொழிக்கும்
வரி வடிவு தந்து
தன் உடனேயே பொம்மரேனியன் போல்
செல்லமாக வைத்துக்கொண்டான்.
காலப்போக்கில்
செல்லமாக இருந்தது அவன்
செல்வங்களையெல்லாம்
எடுத்துக்கொண்டது.
அவனும்
ஈ என்று இரப்பது இழிவு.
ஈ என்று இரப்பவர்க்கு தர மறுப்பது
அதை விட இழிவு என்று
எல்லாவற்றையும் கொடுத்தான்.
இரு மொழிகளுக்கும்
இடையே அவனே
மயிற்பீலியில் நெய்த ஒரு திரையைப்போல‌
ஒரு ஏற்பாடு செய்திருந்தான்.
ஒரு சம ஏற்பாடு செய்வது என்று தான்
சமஸ்கிருதத்தின் அர்த்தம்.
ஆட்சியின் யுத்தப்பசியில் ரத்த ருசியில்
வரலாற்றுத்தடங்கள்
தடம் மாறின.
தடம் புரண்டன.
இப்போது ஒரு புதிய கருத்தின்
உதயமாக இது
எழுச்சியுறட்டும்.
திராவிட சிந்திய (இந்திய) முன்னேற்றக் கழகம்
ஒன்று தோன்றட்டுமே.
ரஜனியின் இந்த பெருங்கனவு
இமயம் என்றால்
அந்த பின் புல தந்திரவாதிகள்
வெறும் கூழாங்கற்கள் தான்.
நம் அருமை அண்ணன்
திரு ஜெயக்குமார் அவர்கள்
இதற்கு
எங்கோ பார்த்துக்கொண்டு
"சாமி" ஆடவேண்டாம்.
திமுக நண்பர்கள் நாத்திகர்கள் என்பதால்
இப்படியெல்லாம்
"சாமி"ஆடமாட்டார்களோ!
தெரியவில்லை.
தேர்தல் ஆணையம்
சோழிகள் குலுக்கிப் போடும் வரை
கொஞ்சம் இப்படி
அசை போட்டுக்கொண்டிருந்தால்
அசையாதவையும் அசையலாம்.
தமிழுக்கும் ஒரு பூகம்பம் வேண்டும்!

===============================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக