ஞாயிறு, 30 அக்டோபர், 2016

HAPPY HALLOWEEN !





அச்சம் தவிர்
=======================================ருத்ரா இ பரமசிவன்.


"அஞ்சுவது அஞ்சாமை பேதமை"
அஞ்சாமையை அஞ்சுவதும்
அச்சம் தரும் பேதமை.
அஞ்சி அஞ்சி சாகவேண்டாம்  
அச்சம் கண்டு நகைத்திட வேண்டும்.
அமெரிக்கர்கள்
இங்கே நான் இருக்கும்
 "லாஸ் ஏஞ்சஸலஸ் " பெருநகரில்
பூசணிக்காயை குடைந்து
பேய்ச்சிரிப்போடு உருவம் காட்டும்
விளக்குகள் நுழைத்து
அஞ்சாதே என்றொரு வினோத‌
"கார்த்திகை தீபம்" கொண்டாடுகிறார்கள்.
நமக்கு கடவுள் மீதும் பயம்.
பன்னிரெண்டு கையிலும்
விதம் விதமாய் பயமுறுத்தும் ஆயுதங்கள்.
அசுரர்களைக் கண்டாலும் பயம்.
முண்டைக்கண்ணும் கோரைப்பற்களும்!
போதாது என்று
கும்பி பாகம்
கிருமி போஜனம்
என்று கருடபுராண அச்சங்கள்.
இப்படி மதம் பதித்தது பயத்தை தான்
"பயமின்மையை" அல்ல.
அதனால் தமிழனின்
வேப்பமரத்தின் மீதும் புளியமரத்தின் மீது
பேய் பிசாசுகள் "கோவில்" கொண்டன.
காலம் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன.
அந்த மரங்களின் அடியில் நின்று கொண்டு
அந்த பேய் பிசாசுகளை விரட்டி அடிக்க‌
ஒரே ஒரு தாயத்து தான்
நம்மிடம் உண்டு!
அது என்ன?
மெல்ல கிசு கிசுத்தாலும் போதும்
"ஊழல்" என்று.
பயந்து வெருவி ஓடிப்போகும் அத்தனையும்.

===============================================================

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

true ji
we are afraid of god always
we are not trying to be friendly with god...
i know one of my friends who regularly visit thirupathi every month
he once told me that thirupathi god is very strict
and may not tolerate indiscipline...
pl explain what is discipline indiscipline.. poor fellow

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

Like dress codes these are framed making us how to live. But a breach mounts with social dynamics to resort to new codes.A life can not cut its own head to suit a tailored dummy called codes or discipline.Invisible social momentum breaks all anachronisms

கருத்துரையிடுக