ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கல்பெயர்த்து இழிதரும்




கல்பெயர்த்து இழிதரும்
===========================================ருத்ரா இ பரமசிவ ன்

(சங்கத்தமிழ் நடையில் நான் எழுதிய செய்யுட்கவிதை.)

கல் பெயர்த்து இழிதரும் 
இமிழ் இசை அருவி
புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ
பச்சை படர்த்தி பகலவன் தீவிழி
அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை
நெடுநல் நாட!அஃது மன் அன்று
உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌
அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி.
நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும்
அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும்.
ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர்
பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும்.
மைபொதி வானும் புள்நிரல் பொலிவும்
இடி உமிழ்பு கண்டு நடுக்குறு செய்யும்.
துடி அன்ன அதிர்வில் புல்லிய தும்பி
வலைச்சிறைக் கண்ணும் அழியச்சிதையும்.
முற்றிய கழையைப் பற்றி நெரிக்கும்
தூம்பின் நீள்க் கை நெம்பு தரும் வேழம்.
யானும் முறிபடும் உயிர் நரல் கேட்டிலை.
நாஞ்சில் கவ்விய கொழுஞ்சினை கயல்படும்
துடிப்பும் அறியலை உயிர் நூல் கோத்து
உலுக்கிச் செகுக்கும் ஊசியோடு அழியும்
ஆவியும் கண்டிலை ஆர்கலி மாவொடு 
தழுவினையாக ஆற்றொடு போகி
ஐந்தும் மறந்தனை எத்திணையாயினும்
அத்திணை ஈண்டு அருகுமின் விரைமின்
நெடுவேல் அன்ன மாவின் தளிராய் 


(பொழிப்புரை தொடரும்)

=================================================ருதரா

12 செப்ட ம்பர் 2014 ல் எழுதியது

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ji excellent...
pl continue to write such good ones... avoid glorifying actors/actresses...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்பு நண்பர் நேட்.சந்தர் அவர்களே

மிக்க மகிழ்ச்சி.நான் இது போல் "சங்கநடைச்செய்யுட்கவிதைகள்" ஏராளமாய் "ஊசியிலைக்காடுகள்" வலைப்பூவில் எழுதியுள்ளேன்.மேலும் பண்டைத்தமிழ்ப்புலவர்கள் "பனையோலை"களில் தங்கள் இலக்கியத் துடிப்புகளை எழுதிவைத்து விட்டுப்போனதைப் போல நானும் "ஓலைத்துடிப்புகள்" என்ற வரிசையில் எழுதி வருகிறேன்.இது வரை 7 துடிப்புகளை பதிவு செய்து இருக்கிறேன்.
உங்களைப்போல இலக்கிய ஆர்வலலர்கள் பார்க்கிறார்கள்.உங்கள் இந்த‌
மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக