வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இலஞ்சிக்கலி.


இலஞ்சிக்கலி.

__________________________சொற்கீரன்

குரூஉத் துளி பொருது பொறிகல் திரங்க‌

குற்றாலப் பொங்கு வெள்ளருவி நுடங்க‌

பரலொடு இலையோடு பாசடை நடுங்க‌

குணில் பாய் முரசின் அன்ன ஆங்கு

சிதர்க்கல் மைக்கண் அதிர் அதிர் 

அறையும் பறையென ஆர்த்து வீழ‌

நீர்த்திரை மறைக்கும் நெடுவிழி ஓர்த்த

ஈரம் பொதி  பார்வையின் ஒருபால்

நோக்க குழையும் நோல்படுத்தாங்கு

இலஞ்சி சுனைய குண்டு நீராம்பல்

தாள் அவிழ் பெருமடம் நாணக்கவிந்து

(தொடரும்)



ஒருநகை உதிர்க்கும் ஒள்வாய் இழியும்

மின்வாய் எதிர்க்கும்  நுங்கின் பிளந்த‌

நுடங்கு சொல் கொண்டு பீலிய வருடி

நெஞ்சம் கலித்த சில்பூ கிளர்ந்து

முகைவிரிக் களிப்பில் உரைத்தது என்..

(தொடரும்)

________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக