வியாழன், 29 மார்ச், 2018

காவேரி


காவேரி
==============================ருத்ரா

போதும் ஆடுபுலி ஆட்டம்.
ஓட்டு வங்கியை
காவேரியில் பதுக்கி வைத்து
இங்கே
எத்தனை முகமூடிகள்?
அவன் தான் காரணம்.
இல்லை
இவன் தான் காரணம்.
அந்தக்கட்சியின் துரோகம் இது.
இந்தக்கட்சியின் கையாலாகாத தனம் இது.

எது எப்படியோ
வெள்ளம்போல வருகிற தண்ணீரை
வரப்புகளும் மொட்டைவாய்க்கால்களும்
எச்சில் படுத்தியது போக‌
எல்லாம் கடலுக்குள் சமாதியாகவிட்டு
வறண்ட காலத்தில்
ஒப்பாரி வைக்கும்
விவசாயிகளின் அறிவுநுட்பம் அற்ற‌
கையறு நிலை இது.

மற்றும்
டெல்லியே காரணம்.
அதுவும் இந்த
காவிரியைப்பார்க்கிறது
வேறு கண்ணில் பார்க்கிறது.
கற்பனையில்
மதவெறி சுழித்து ஓடும்
ரத்தங்களின் ஆறாய்.

கர்நாடகமும் தமிழ்நாடும்
நூறு கைள் முளைக்க
அந்த நூறுகைகளையும்
முறுக்கிக்கொண்டு
பாகுபாலி கணக்காய்
வாள்வீசி ரத்தம் குடித்து
அரசியல் சினிமா
அரங்கேற்றம்
நடத்தும் காட்சி இது.

இந்த மனிதர்கள் எல்லாம்
முகமூடி கழற்றி ஒரு நாள்
அந்த நீரையாவது குடிக்கலாமா
என்று தவியாய் தவிப்பார்கள்
ஆம் அது..
தங்கள் சிறுநீரையே.

அப்போது காவிரி வறண்டு
அதன் ஊற்று தூர்ந்து
பாலைநிலம் மட்டுமே
அவர்கள் காலடியில் இருக்கும்.
மக்களின் மற்றும்
கால்நடைகளின்
எலும்புக்கூடுகளின் குப்பையே
அங்கு சிதறிக்கிடக்கும்.

=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக