ஞாயிறு, 18 மார்ச், 2018

"ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்"

"ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்"
=================================================ருத்ரா

இது
விஜயசேதுபதியின் படம் அல்ல!
நம் தமிழ் நாட்டு அரசியலின்
உயிரான பிரச்னைகளுக்கெல்லாம்
ரஜனி அவர்கள்
சிரித்துக்கொண்டே மழுப்புவதன்
அர்த்தம் தான்
"ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்."
"சர்வர் சுந்தரம்" என்று ஒரு படம்
அதில் நாகேஷ் அவர்களின் நடிப்பு
அற்புதமாய் இருக்கும்.
அதில் ஒரு காட்சி.
நாகேஷின் தாயாராக நடிக்கும்
லெட்சுமி அவர்கள்
நாகேஷ்ஷிடம்
"ஏண்டா எப்படா கல்யாணம் பண்ணிக்கப்போறே"
என்று கேட்பார்.
"போம்மா! இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்?"
என்று பிகு பண்ணுவார்.
அதற்குப்பிறகும்
அந்தக்கேள்வியை அந்த அம்மா
திருப்பி திருப்பி கேட்க வேண்டும்.
அவர் பிகு பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்புறம் அவர்
திடீரென்று ஒத்துக்கொண்டு
அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாராம்.
இப்படி சொல்லவேண்டும் என்று
அம்மாவுக்கு அவர் ஒத்திகை நடத்திவிட்டு
மீண்டும் அவர் கேள்வி கேட்கச்சொல்லுவார்.
அதன் படி அம்மா ஆரம்பித்து விடுவார்.
அவரும் பிகு பண்ணி
இப்போ கல்யாணம் வேண்டாம் என்பார்.
அதற்கு அம்மா
"சரி தான் போடா.அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்"
என்பார்.
அந்த நகைச்சுவைக்கு
தியேட்டரே சிரித்து சிரித்து
அதன் சுவர்கள் எனும் "விலாவுக்கே"
வலி வந்து விடும்.
அந்த லட்சுமி அம்மாள் மாதிரி
புத்திசாலிகள்
இருந்தால்
தமிழகம் தப்பிக்கும்.
இல்லையெனில்
"காவிரியில்
தண்ணீர் கிடைத்தாலும்
கண்ணீர் கிடைத்தாலும்
கவலையில்லை.
விவசாயிகள்
பஞ்சத்தில் எலும்புக்குவியலாகி
வீழ்ந்தாலும் கவலை இல்லை.
தமிழுக்கும் அமுது என்று பேர் என்று
பாடுவதற்கு பதில்
இந்திக்குத் தான் அமுது என்று பேர்
என்று பாடினாலும் கவலையில்லை.
திராவிடம் என்றால்
அது மோடிஜியின்
"ஜிப்பா பாக்கெட்டில் இருக்கிறது"
என்று சொன்னாலும்
கவலையில்லை.
மனிதன் சாதி மதம் புழு பூச்சி தமிழ் தமிழன்
எல்லாம் ஒன்று தான் என்று
அத்வைத பாபா சொல்லியிருக்கிறார்"
என்று
"ஆத்மீக அரசியலின்"
பஞ்ச் டைலாக் கேட்க‌
எல்லோரும் தயாராய் இருங்கள்
அன்பான தமிழர்களே!

====================================================


2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையாக சொன்னீர்கள் நண்பரே

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி திரு.கில்லர்ஜி அவர்களே

கருத்துரையிடுக