செவ்வாய், 20 மார்ச், 2018

கயல்முள் அன்ன..

கயல்முள் அன்ன..
=================================================ருத்ரா.

நாற்றிய போன்ம் வால்செறி  எல்லே
எத்துணை எரித்தும் தண்காழ் சேக்கை
கிடந்தே குளிர்பூங்  காலொடு இழையும்.
அழல் அவிர் மாண் இழை பூட்டுகம் என்னே.
கொல்சுரம் கல்படு ஆற்றின் மீமிசை
அவன் ஏகிய காலை எரிதழல் ஊண்கொள்
நோகுதல் செய்யும் காதல் நோயிலும்
பனித்துறை பகன்றையின் உரிஉடுத்தன்ன‌
களிக்கும் ஆயினும் கள்ளம் ஒளிக்கும்
ஆர்த்த ஓதையின் அரிக்குரல் நுவலும்.
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
மூத்தார் முளிதரும் வாய்ச்சொல் என் தரும்?
முழவின் பாணி மூசும் வண்டென‌
அலைவுறும் யானோ அளியள் மன்னே.

=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக