செவ்வாய், 27 மார்ச், 2018

தமிழருவி அவர்களே

தமிழருவி அவர்களே
============================================ருத்ரா


நீங்கள் ஒலிப்பதில்
எந்த தமிழும் இல்லை.
எந்த அருவியும் இல்லை.
காந்திஅடிகளை
ரஜனி எனும் நடிகருக்கு
ஒப்பிடுவதன் மூலம்
ஏதோ ஒரு அதல பாதாளத்தில்
நீங்கள் விழுந்து கிடப்பதாக‌
தெரிகிறது.
ஆம்.
உங்கள் பேச்சில்
கூவம் தான் சலசலக்கிறது.
ரஜனியை முதல்வராக கூப்பிட சொல்லி
ரசிகர்களை
உசுப்பேற்றிவிடுவதில்
உங்களுக்கு யாரோ
பக்கத்தில் இருந்து
கோலி சோடா உடைத்துக்கொடுத்து
உசுப்பேற்றி விடுகிறார்கள்.
ரஜனியைப்பற்றி
"அணில் ஆடு இலை ஈட்டி.."
என்று
பாப்பா பாடம் சொல்வதோடு
நிறுத்திக்கொள்ளுங்கள்.
காந்தியடிகளின்
ஆத்மிகத்தில்
விடுதலைக்கான வீரம் இருந்தது.
இந்த பாபாவோ
படப்பிடிப்புகளில் தான்
கூடு கட்டிக்கொண்டிருக்கிறார்.
இவர்
அட்டையில் கட்டும்
அரசியலில்
முளைக்கும் விடியலும்
வெறும் "லேசர்"விளையாட்டுகள் தான்.
தமிழருவி அவர்களே
உங்கள் பெயரில் உள்ள‌
தமிழை யாருக்கும் அடகு வைக்கவேண்டாம்.
அந்த "தமிழ்" தமிழர்களுக்கு
மட்டுமே உரியது.
அதை கழற்றித்தந்துவிடும்
நேரம் இப்பொழுது உங்களுக்கு
வந்து விட்டது.

=================================================

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இந்த ஆளுக்கு என்ன ஆகிவிட்டது மொத்த மரியாதையையும் இழந்துட்டானே பாவம்.

யாரோ செய்வினை செய்து வச்சுட்டாங்களோ...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அழகிய தமிழில் எளிமையாக கோர்வையாக பேசக்கூடிய ஒரு தமிழ் அறிஞர் மற்றும் காந்தியவாதி திரு.தமிழருவி மணியனின் சமீபத்திய பேச்சு ரசிக்கத்தக்கதாக இல்லை.

KILLERGEE Devakottai சொன்னது…

இவருடைய பேச்சில் மயங்காதோர் உண்டோ ?

கருத்துரையிடுக