வியாழன், 22 மார்ச், 2018

ரஜனியின் முன்னே...

ரஜனியின் முன்னே...
==============================================ருத்ரா இ பரமசிவன்


இமயமலைக் கோவில்களுக்கு எல்லாம்
சென்று வந்து விட்டீர்கள்
உங்களுக்கு பின்பலம் அல்லது பின்புலம்
பி.ஜே.பி தானே?
ஊடக காமிராக்கள் கேள்விக்கணைகளால்
ரஜனி எனும் மாமலையைத்துளைத்தன.
அதற்கும் அந்த "ஸ்டைல் சிரிப்பே" பதில்.
அப்புறம் சொல்கிறீர்கள் :
என் பின்னே கடவுள் ..
அதற்கு பின்னே மக்கள்...என
ஆன்மீக அரசியலுக்கு
"டெஃபினிஷன்" கொடுத்துவிட்டீர்கள்.

"வாகஸ் பாபுலி வாகஸ் தே"
அதாவது
மக்கள் குரலே மகேசன் குரல்!
இவை லத்தின் சொற்கள்.
எங்கள் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணன்
சொல் இயல் படி
அதன் தோலுரித்துப்பார்த்தால்
அதற்குள் இருப்பது தமிழ் எனும் திராவிடமே!


இமயமலை சென்றது போல்
நீங்கள்
மேலை நாட்டுப் பனிமலைகளுக்குச் சென்று
அங்கேயும் எங்காவது இப்படி
ஒரு விஞ்ஞான இயல்படி
"ஸ்டேடிஸ்கல் நார்மல் கர்வ் ஷேப்பின்"
ஒரு புடைப்பு லிங்கம் பார்த்து
"ஓ இது ஒரு இயற்கை கணிதம்
இதை ஆளும் மனிதனே தேவன்"
என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் அதற்கு
குறுக்கே மறித்துக்கிடக்கும்
மோடிகளும் ஷாக்களும்
அதை மறைக்கும்
தந்திரம் செய்வார்கள்.

பார்க்கலாம்.
இவருக்கு பின்னே இருக்கிற‌
மகேசனுக்கு பின்னே இருக்கிற‌
இவரது மக்கள்
இவருக்கும் முன்னே வந்து
அரசியல் ஞானம் ஊட்டும்
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
வருக! வருக!
ரஜனி அவர்களே!
இமயத்தின் குகை இருக்கட்டும்.
"வாக்ஸ் பாபுலி"யின் வாக்குப்பெட்டி எனும்
குகைக்குள் நுழைந்து வாருங்கள்.
அப்புறம் நீங்கள்
"பாயும் புலியே" தான்.
எல்லாம் புரியும்.
எல்லாம் தெளியும்.

===========================================











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக