சனி, 24 மார்ச், 2018

கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்

கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
==================================================ருத்ரா
ஓலையின் ஒலிகள் (2)


அரைநாட் கங்குல் அன்ன நுதலிய
நெடுவான் ஏறி நிறைமதி சூடும்
ஒளியிழை ஏந்தி மன்றல் நோக்கும்
மடமை ஒக்கும் முகம் திருத்திய‌
கண்டாய் என்னை. என்சொல் விதிர்ப்பாய்?
ஆறலை மள்ளர் அடுபசி ஆற்ற‌
அம்தூம்பு கொடிச்சுரை ஊண் கொண்டாங்கு
கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
பொறிநிழல் தூஉய் கண்கள் படுக்கும்
வெள்ளிடை போழ் விரைபசும்பாசிடை
நனந்தலை ஆங்கு களவு மயக்கிய‌
காலை களிகூர கலந்தனம் மன்னே.
பூளைப்பூ மலி அலரிடை நோக‌
குவவுக்கூர் திரை குடக்குஏர்பு எறிதர‌
ஓவாது உணக்கும் கொடுநோய் கொள்ள‌
பசந்தேன் மாணிழாய்.காட்டுதி ஆறு.
என் நெகிழ்வளை மீட்டுதி.நன்றே மொழிவாய்.

=========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக